Skip to main content

499 ????????????பாபநாசத்தில் நடந்த பதிவர் குளியல்

“ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்”


ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்.


  இதையெல்லாம் தெரிந்து தான் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் ஒரு அருமையான பதிவர் சந்திப்பை (குளியலை) பாபநாசம் அருவியில் ஏற்பாடு செய்திருந்தார். நான், நாஞ்சில் மனோ, சங்கரலிங்கம் ஐயா,திவான் ஜி,நண்பர் சுதன் மற்றும் நண்பர் ராஜேஷ் எல்லோரும் சேர்ந்து பாபநாசம் சென்று எங்களுடைய பாவங்களை கழுவிக்கொண்டோம். அருமையான இரவு கொண்டாட்டம். சிரித்து ... சிரித்து மாய்ந்து போன தருணங்கள் எதையும் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. 


                          இதுவரை பொருட்செலவை பொருட்படுத்தாது நெல்லையில் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்திவரும் திரு. சங்கரலிங்கம் ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதுவும் இவ்வளவு வேலை நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த ஒரு விளம்பர நோக்கமின்றி மிகவும் அருமையாக அவர் செய்யும் பணிகள் ஆச்சரியமூட்டுகிறது. எந்த ஒரு முகச்சுளிப்பின்றி அவர் செய்யும் பணியை மனதார வாழ்த்துகிறேன். இதை விலாவாரியாக நம் மனோ அவர்கள் எழுத இருப்பதால் இதை நான் இத்தோடு முடிக்கிறேன்.

Comments

வீழ்ச்சியில் கொட்டும் நீரின் மகிமைப்பற்றி அழகாக சொல்லியிருக்கிங்க விஜி!!கூடிய சீக்கிரம் ,நாங்களும் கலந்துகொள்ளும்படி,ஒரு நிகழ்ச்சியை, ஆபிசரிடம் பரிந்துரை செய்யுங்க!
Unknown said…
அடுத்த மாதம் ஆபீசர் அவர்களின் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. நெல்லையில் இதுவரை நடந்த பதிவர் சந்திப்பில் அதுதான் பெரியதாக இருக்கும். கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
Unknown said…
அது ஒரு பெரிய கதை. சட்டியில இருந்தா தானே அகப்பையில் வரும்??????????? இல்லையா????????
Unknown said…
நாஞ்சில் மனோ ஒரு மெகா பதிவாக போடுவார். அதில் நீங்க இந்த கேள்வியின் விடையை எதிர் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
Anonymous said…
மனோவின் குளியல் காட்சிகளைக்காண பேராவலுடன் காத்திருக்கிறோம். குளிக்கும்போதாவது அந்த 'மிஷ்கின்' கண்ணாடியை கழற்றினாரா??
Anonymous said…
மனோ எழுதப்போகும் பதிவு. நினைத்தாலே திகிலடிக்கிறது. 'அகஸ்தியா அருவியில் குளிக்கும் எண்ணம் உருவான விதம்' பத்தியே அண்ணன் 175 பதிவு போடுவாரே. அதுக்கப்பறம் பஸ்ஸில் சென்றது, பஸ் நின்ற இடங்களில் டீக்கடை மாஸ்டரிடம் பேட்டி எடுத்தது, அந்த பேட்டி எடுத்த காரணம் உருவான விதம்...!! ஸ்ஸ்... எந்த குருவயூரப்பா. ஏன் இந்த வல்லிய சோதனா. யான் எந்த தப்பு செஞ்சு.....
Unknown said…
நாஞ்சில் மனோ கண்ணாடி உட்பட ”எதுவும்” போடவில்லை.... ஏன் சோப்பு கூட போடவில்லை. ஆனால் படங்கள் துரதிஷ்டவசமாக என்னிடம் இருந்தது அழிந்துவிட்டது. இனி அவர் போட்டால் தான் உண்டு. ஆனால் உங்கள் ஆசையை தீர்க்கும் படங்கள் அதில் உண்டு. எதையும் தாங்கும் இதயம் கொண்டோர் மட்டும் பாரீர். இளகிய மனம் கொண்டோர் மருத்துவர் உதவியுடன் பார்க்கவும்.
Unknown said…
இந்த கண்ணாடிக்காரன் தொல்ல தாங்க முடியலப்பா...அந்த 499 என்ன பிடிவாரண்ட்டா மாப்ள!
வழக்கம்போல லேட்டு. மன்னிக்கவும்.
சில ரகசியங்கள் வெளியே சொல்லப்பிடாது. உஸ்ஸ்ஸ்.
எத்தனை(!!!!) படங்கள் எடுத்தீர்கள்! அத்தனையும் அழிய வழியே இல்லை.
மிக சுருக்கமாக முடிச்சிட்டீங்க. அந்த 499 அப்புறம் 25 இதெல்லாம் நினைவில் நிற்கவில்லையா?

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந