Skip to main content

நுகர்வோருக்கும் வேண்டும் விழிப்புணர்வு.................



இன்று ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்தேன்.  சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது .... போனவாரம் நீங்க முகநூலில் ஒருவருடன் (ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் ) இருக்கிறமாதிரி போட்டோ போட்டிருந்தீர்களே இவருக்கு அவர் நண்பரா என நண்பர்கள் கேட்டதாக கூறி ஒருமாதிரியாக சிரித்தார்.    நானும் அவர்களுக்கு நண்பர்தான் என்ன விஷயம் என்றேன் இல்லை சும்மாதான்  என்று சமாளித்தார்.  சும்மா சொல்லுங்கண்ணே நமக்குள் தானே என்றேன். அப்பொழுதுதான்  அவர் தன் மனக்கசப்பை கொட்ட துவங்கினார்.

                       
பாவப்பட்ட மக்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் துவம்சம் செய்கிறார்கள்,பல்காரங்களை ரோட்டில் கொட்டுகிறார்கள். அப்படியென்றால்  பெப்சியை தடை செய்ய வேண்டியதுதானே சீறினார் . அப்பாடா அப்படி வாங்க வழிக்கு என்று மனதிற்குள் நினைத்தவாரே நிலமையை விளக்க துவங்கினேன்.

                           முதலில் சுகாதாரம் என்ற விஷயத்தில் பாவம் பணக்காரன் என்ற பாகுபாடு ஒன்றும் சட்டத்திற்கு கிடையாது.  யார் தவறு செய்தாலும் சட்டத்திற்குட்பட்டுதான்  அரசு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கின்றனர். பாவப்பட்டவன் என்பதற்காக  அவன் கலப்படம் செய்வதை  அல்லது அடுத்தவன் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன..?

                           
அடுத்ததாக பெப்சி.....           பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளையும் மாதிரி எடுத்து இவர் அனுப்புகிறார் . ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கு சில நேரங்களில் நீதியை தாமதப்படுத்தவோ அல்லது தீர்ப்பை மாற்றவோ செய்யலாம். என்ன நடக்கிறது என்பதை விளக்க தேவையில்லை அது எல்லோரும் அறிந்த ரகசியம் தான்.  இவர் தன் அதிகார வரம்புக்குள்ளே இருந்து மட்டும்தான் செயல்பட முடியும். நீங்கள் நினைக்கிற அளவிற்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால்  அதையும் செய்வார்.  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை எவ்வளவு இடையூறுகளுக்கிடையில் கனகச்சிதமாக செய்கிறார் என்பதை நான் அவருடன் இருந்த சில தருணங்களில் புரிந்துகொண்டேன். எவரையும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அப்பாவி மக்கள் சுகாதாரமற்ற பொருட்களை உட்கொண்டு இன்னலுக்கு ஆளாகாக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்  அரசின் சட்டத்தையே அவர் நடைமுறைப்படுத்துகிறார். அல்லாமல் பாவப்பட்டவர் /தனிநபர் மீது எந்தவித காழ்புணர்ச்சியோ அல்லது பன்னாட்டு கம்பனிகள் என்ற எந்த வித பாகுபாடோ அவருக்கு கிடையாது என்றேன்.

                             மேலும் அவர்  நாகர்கோவிலில் சில பெரிய ஹோட்டல்களின் பெயரை குறிப்பிட்டு இங்கே இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது என்று புகார் கொடுத்தும் ஒரு பயன் இல்லை. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

                 நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரி மீது புகார் செய்யுங்கள்.....தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேளுங்கள்..... தகவல் கிடைக்கும். பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

       
         
                மேலும் ஆபீசர்(சங்கரலிங்கம் ராஜகோபால் அவர்கள்) பணிபுரிவது நெல்லையில் அவர் அதிகாரவரம்பிற்குள் மட்டுமே அவர் செயல்பட முடியும்...... இங்கே அதிகாரிகள் செயல்படவில்லை என்பதற்காக அவர் செய்வது தவறு என்று கூறுவது முதிர்ச்சியின்மையேயாகும். நாட்டுக்கு நல்லது செய்பவர்களை எங்கிருந்தாலும் ஊக்குவிக்க வேண்டும்..... செயல்படாதவர்களை தட்டிக்கேளுங்கள்...அப்பொழுதுதான் நாடு உருப்படும் என்றேன்.

                   பாவப்பட்டவன் என்கிறீர்கள். அவனிடம் பலதடவை எச்சரிக்கை விடுத்தும் கால அவகாசம் கொடுத்தும் அவன் திருந்தவில்லை எனும்போதுதான்  நடவடிக்கை எடுக்கப்படுகிறது.   ஒருதடவை நஷ்டம் ஏற்படும்போதுதான் அவனுக்கும் வலிக்கிறது.

             அன்று அதிகமான கடைகளில் திறந்த வெளியில் ஈ மொய்க்க விற்றுக்கொண்டிருந்த பஜ்ஜி பலகாரங்கள் அனைத்தும் இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற  கண்டு மகிழ்கிறேன்.....வெறும் சட்டம் மட்டும் போட்டு பயன் இல்லை. அது சரியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். மக்களும் அதை மதிக்க வேண்டும். மதிக்காதவர்களை மதிக்கவைக்க வேண்டும் அதுதான் அதிகாரிகளின் கடமை. அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தத்தம் கடமைகளை ஒழுங்காக  செய்தால், மக்களும் தம் உரிமைகளையும் கேட்டு வாங்கி கடமைகளையும் ஒழுங்காக செய்தால் தான் நம் நாடு வளம் பெறும்.

                 சிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தாதீர் அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.... தந்தை தன் மகனை தண்டிப்பது அவன் நாசமாய் போவதற்காக அல்ல. சில அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்பதற்காக நேர்மையான அதிகாரிகளை குற்றம் சொல்லாதீர்..... எல்லோரும் அப்படியே நேர்மையற்று இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்....அது நீங்கள் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் செய்யும் பச்சைத் துரோகம்.

                   

Comments

// பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்... // ஆலோசனை நன்று...
நண்பர் என்று அல்லாமல் நடுநிலையில் நின்று பேசியிருப்பது நீங்கள் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினைக்காட்டுகிறது விஜி!
குறைகள் இருப்பின் நேராகவே சொன்னால் திருத்திக்கொள்ள எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
என் நட்பு உங்களுக்கு இப்படி ஒரு சிரமத்தைக்கொடுத்துவிட்டதே என்பதுதான் என் வேதனை.
அவருக்கு நம்ம ஆபீசர் மீது பொறாமையா கூட இருக்கலாம் விஜயன்...!
இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற கண்டு மகிழ்கிறேன்.//

ஒருவேளை ஈக்கள் மொய்க்கும் பஜ்ஜி திங்க ஆசை பட்டு இருப்பார்ன்னு நினைக்கிறேன்.

நல்லது செய்தாலும் அதுக்கும் ஒரு வெளக்கெண்ணெய் பதில் வரத்தான் செய்கிறது விடுங்க விஜயன், பதிவு போட்டுட்டீங்கல்லா இனி யாரும் கேள்வி கேக்கமாட்டாங்க.
FOOD NELLAI said...
குறைகள் இருப்பின் நேராகவே சொன்னால் திருத்திக்கொள்ள எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
என் நட்பு உங்களுக்கு இப்படி ஒரு சிரமத்தைக்கொடுத்துவிட்டதே என்பதுதான் என் வேதனை.//



இதில் சிரமம் என்ன ஆபீசர், அந்த நண்பர் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விஜயன் அருமையா பதில் சொல்லிட்டார், அவருக்கும் உறுத்தல் இல்லாமல் போயிருக்கும் இல்லையா ?
Unknown said…
ஆபீசர் அவர்களுக்கு....

எனக்கு உங்கள் நட்பு ஒரு வரப்பிரசாதம் தானே தவிர சிரமம் அல்ல. நல்ல செயல் புரிபவர்களுக்கு ஊக்கம் கொடுக்க எல்லோரும் முன்வர வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந