தமிழகத்தில் திமுக , அதிமுக அணிகு மாற்றாக நல்ல நேர்மையான தலைவரைக்கொண்ட ஒரு கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழக அரசியலின் அவல நிலையைப் பார்க்கும் போது, பீகார், மேற்க்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைக்காட்டிலும் மிகவும் கேவலமாக போய்விட்டது. அங்கே நிதிஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் மக்களுக்கு நல்லதை செய்து நல்ல செல்வாக்குடன் உள்ளனர். எதிர்கட்சிகள் செல்லாக்காசாகிப்போய்விட்டது. ஆனால் தமிழ் நாட்டில் ஆளுங்கட்சி தோற்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. தமிழ் நாடு உருப்படவேண்டுமென்றால் அது தோற்றாக வேண்டும் . ஆனால் மாற்று அணி என்று பார்க்கையில் அதிமுக நல்ல பலத்துடன் இருப்பது போல் தோன்றினாலும் அது அனைத்து மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் அணி அல்ல. அவர்களும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல என்றாலும் தப்போ சரியோ செய்வதை ஆணித்தரமாக செய்யும் துணிவு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அர...