Skip to main content

கடவுள் தந்த பரிசு God"s gift

அது ஒரு கனாக்காலம்.. முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இல்லாத காலம்...அன்று ப்ளாக் மற்றும் அதில் உள்ள நட்புகள் தான் உலகம்... சண்டையில் சட்டை கிழியும் என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்தது....முகநூல் வராத வரை. அதன் பின் ப்ளாக மீதான ஆர்வத்தை முகநூல் வெகுவாக குறைத்து...அநேக பளாக நண்பர்கள் முகநூலிலும் வரவே பளாக்கில் வருவது நின்றே போனது எனலாம். இருந்தாலும் ப்ளாக் மீதான மதிப்பு குறையவில்லை.

    இனி மேட்டருக்கு வருவோம்
இது ஆடி மாசம் ஆஃபர்களுக்கு பஞ்சமில்லாத காலம். வசந்த் அன் கோவில் பொருள் வாங்கினால் 41 கார் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு தினுசாக ஆஃபர்கள் இருக்கும். ஆனால் இந்த பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று  யாரும் பொருட்கள் வாங்குவது கிடையாது. தேவையான பொருளை வாங்கி விட்டு போகிற போக்கில் பரிசு கூப்பனை நிரப்பி பெட்டியில் நிராசையுடன் போட்டுவிட்டு வருவதுதான் வழக்கம். ...அப்புறம் யாருக்கு என்ன பரிசு விழுந்தது என்று நாம் கேட்பதும் இல்லை. நமக்கு பரிசு விழுந்ததாக அவர்கள் சொல்லப்போவதும் இல்லை. எப்பொழுதாவது அக்கடைக்கு போகும் பொழுது பரிசு வாங்கியவர்களின் படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள் நாமும் அதை பெருமூச்சுடன் பார்த்து நகர்வோம். இதுதான் வாடிக்கை  அப்படித்தானே..

    ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் பரிசு கூப்பனை நிரப்பும் போது மிகுந்த நம்பிக்கையுடன் நிரப்புவது வழக்கம். அப்புறம் அந்த கூப்பனை மிகுந்த சிரத்தையுடன் குலுக்கல் வரை பாதுகாத்து வருவேன்...ஆனால் இதுவரை  ஒரு குண்டூசி கூட பரிசாக கிடைத்ததில்லை.
           என் மனைவிக்கு இம்மாதிரி நம்பிக்கை எதுவும் கிடையாது. ஆனால் அதிர்ஷ்டம் அங்கேதான் குடியிருக்கும் போலும். வழக்கம்போல பள்ளி விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு சென்ற போது ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றபோது பரிசு கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்... மனைவி உட்பட உடன் சென்ற நாலு பேரும் தத்தம் பெயர்களில் கூப்பனை நிரப்பி  கொடுத்து வந்தார்கள்... வீட்டில் வந்து துணியை பிரித்த கையோடும் பில்லும் கூப்பனும் வழக்கம்போல் கவருடன் குப்பைக் கூடைக்கு சென்றது.அங்கே தான் விதி விளையாடியது.

ஒரு மாதம் கழித்து என் மனைவிக்கு ஒரு கார் பரிசு விழுந்ததாக செய்தி வந்தது. அதுவும்  வீட்டுக்கே வந்து சொன்னார்கள். காரணம் கூப்பனில் எழுதிக் கொடுத்த போன் நம்பர் கூட பழுதாகிப்போனது. மேலும் கையில் கூப்பனும் இல்லை. வாங்கிய பில்லும் இல்லை என்றாலும் வருவது வழியில் தங்காது என்பார்கள்... பொதுவாக எனக்கெல்லாம் அது கெட்ட விஷயத்தில் தான் நடக்கும். ஆனால் முதன்முறையாக நல்ல விஷயத்தில் வர வேண்டியது வழியில் தங்காமல் வந்து சேர்ந்தது. எல்லாம் இறைவன் செயல். ஆம் அது கடவுளின் விருப்பம்.

Comments

Kesava Pillai said…
யோவ்,கார் கிடைச்சுதா இல்லையா? புரியும் படியா நம்ம என்னைக்கு பேசியிருக்கோம் !!
Unknown said…
கிடைச்சிரும்....விரைவில்... கேரளாவில் ரெஜிஸ்ட்ரேசன் நடந்திட்டிருக்கு. முடிந்ததும் கொண்டு வரணும்.
வாவ்...மிக்க மகிழ்ச்சி விஜி.God's gift from ggod's country.இனி எல்லாம் சிறப்பு!

Popular posts from this blog

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா