Skip to main content

Posts

Showing posts from March, 2011

அண்ணா அண்ணாதான்.

முதல்வரான பிறகு காஞ்சியில் சொந்த வீட்டுக்குப்போனார் அண்ணா. ஐஸ் வாட்டர் வந்ததும் “ஏது பிரிட்ஜ் ! பணம் ஏது ?” என்று கேட்டு வாயிற்படியில் தலைவைத்துப் படுத்து விட்டார் !                       வீட்டில் மருமகள்கள் வந்து தவணை முறையில் வாங்கியதாக புத்தகத்தைக் காட்டிய பிறகே உள்ளே சென்றார்.                        “வாழ்நாளில் எப்போதும் இல்லாத அடக்கத்துடன் உங்கள் முன் நிற்க்கிறேன்” என்று பதவியேற்றவுடன் கடற்கரையில் மக்கள் முன் சொன்னார்.                       “முன்பு இருந்தவற்றை கலைக்கவோ குலைக்கவோ வரவில்லை; மேம்படுத்தவே வந்துள்ளேன் என்று அரசு ஊழியர்களிடையே பேசினார்.  கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பண்பு அது.                          ஒருநாள் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து பிற்பகல் நான்குமணிக்கு கோட்டைக்குப் போக வேண்டிய அவசர வேலை. உதவியாளார்கள் மறந்துவிட்டு கடைசி நேரம் நினைவுறுத்தினார்கள். பரபரப்பாக புறப்பட்ட முதல்வர் அண்ணா கார் அருகே வந்துவிட்டார்.  ஓட்டுனர் இல்லை. போலீஸ் அதிகாரி அந்த ஓட்டுனரை கடிந்து கொண்டார். முதல்வரின் பாராட்டைப் பெறலாம்   என்ற நினைப்போ என்னவோ ?. முதலமைச்சர் அண்ணா மெது

ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

SONY INDIA வின்  RE SELLER'S MEET சென்னையில் ராடிசன் ரிசார்ட்-ல் 15 மற்றும்16-03-2011-ல் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.  சோனி இந்தியாவின்  இந்திய பிரதிநிதி  waki chan  பேசிய போது  ஜப்பான் நாட்டைப்போல் எந்த ஒரு நாடும் சோதனைகளை சந்தித்ததில்லை என்றும் ஆனால் அதில் எல்லாம் இருந்து மீண்டுவந்த ஜப்பான் இதிலிருந்தும் மீளும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் சோகமான முகத்துடன் வாக்கி சான் conference -ல் சோனியின் தயாரிப்புகளை விளக்கும் வாக்கி சான் நாங்கள் அங்கு இருக்கும்போது நம்முடைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அழகிரி ஆகியோர் திடீரென வருகை புரிந்தார்கள். அவர்களை சந்திக்க  வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஏதோ  விவாதத்தில்  இருப்பதாக சொல்லப்பட்டது.  மாலையில் தான்  சாதிக் பாட்சா இறந்த விபரம்  பத்திரிகையில் வந்தது. அவர்களுக்கு ராசாவினால் அவர்களின் ராஜ வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.  முதல்வருக்கு அது ராசியான ரிசார்ட்டாம். வசதியானவர்கள என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது . ஒரு ஆர்வக்கோளாரால்  அதன் வாடகையை கேட்க தோன்றியது.  பத

மீண்டு வருமா தமிழகம் ......................?

தமிழகத்தில் திமுக , அதிமுக அணிகு மாற்றாக  நல்ல நேர்மையான தலைவரைக்கொண்ட ஒரு கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   தமிழக அரசியலின் அவல நிலையைப் பார்க்கும் போது, பீகார், மேற்க்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைக்காட்டிலும் மிகவும் கேவலமாக போய்விட்டது.     அங்கே நிதிஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் மக்களுக்கு நல்லதை செய்து நல்ல செல்வாக்குடன் உள்ளனர்.   எதிர்கட்சிகள் செல்லாக்காசாகிப்போய்விட்டது.                          ஆனால் தமிழ் நாட்டில் ஆளுங்கட்சி தோற்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.   தமிழ் நாடு உருப்படவேண்டுமென்றால் அது தோற்றாக வேண்டும் . ஆனால் மாற்று அணி என்று பார்க்கையில்  அதிமுக  நல்ல பலத்துடன் இருப்பது போல் தோன்றினாலும்  அது அனைத்து மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் அணி அல்ல. அவர்களும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல என்றாலும் தப்போ சரியோ  செய்வதை ஆணித்தரமாக செய்யும் துணிவு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அரசியலில் சில குப்பைகளை அகற்றவேண்டியிருப்பதால்  இந்த தடவை  இவர் ஆளவேண்டியது காலத்தின் கட்டாயம்.                        இவர்களுக்கு மாற்றாக தகுதியான ஒரு ஆள் என்று பார்த்தால் அரசியலில் அ

தமிழன்னா சும்மாவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு பார்க் பெஞ்சில்  சந்தோஷமாக இருந்த காதலர்களை போலீஸ்காரர் ஒருவர் கேட்டார். ”நீங்கள் திருமணம்  செய்துகொள்ளக்கூடாதா ?” ”நாங்கள் திருமணம் ஆனவர்கள்” என்றான் இளைஞன். ”பிறகு வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கலாமே ”என்றார் போலீஸ்காரர். இவளுடைய கணவரும் எனது மனைவியும் விடமாட்டார்கள்” என்றான் இளைஞன். ********************************************************************************* ஸ்விட்சர்லாந்து நாடு. ரயில் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் குகை ஒன்றின் வழியாக செல்கையில் பெட்டியில் இருள் சூழ்ந்தது. அப்போது “இச்” சென முத்தமுடும் ஒலியும் “ப்ட்”டென அடி கொடுக்கும் ஓலியும் கேட்டன. குகையை விட்டு ரயில் வண்டி வெளியே வந்து ஓடியது. நால்வரும் தம்முள் கீழ்க்கண்டபடி நினைத்துக்கொண்டனர். முதியவர்: சே ! இந்த இளம் ஆண்மகன் ரொம்ப மோசம். பெண் புத்திசாலி. தன்னை முத்தமிட்டவனை அடித்துவிட்டாளே. பெண் : இந்த ஆடவரில் யாரோ ஒருவன் கிழவியை போய் முத்தமிட்டிருக்கிறான். நான் இருப்பது எப்படி  தெரியாமல் போனது?. சிங்களன்: அந்த தமிழன் அந்த பெண்ணையல்லவா முத்தமிட்டிருக்கிறான். ஆனால் அந்த பெண் என்னையல்லவா அடித்துவிட

கோழி முட்டை சைவமா !! இன்னும் பல தகவல்கள்

கால்நடைகள் மூலம் நமக்கு கிடைக்கிற உணவுப் பொருட்கள் பால்,முட்டை,இறைச்சி. இதுல பாலை சைவம்னு சொல்றோம்.இறைச்சியை அசைவம்னு முடிவு கட்டிட்டோம். ஆனா இந்த முட்டை மட்டும்  நடுவில் கிடந்து திண்டாடுது.                         பால் தருவதால் பசு இறப்பது இல்லை. ஆனா இறைச்சி வேணும்னா ஒரு உயிரை கொன்னே ஆகணும் இல்லையா. அப்படி பார்க்கிறபோ முட்டைய சைவ உணவுன்னு சொல்லலாம். முட்டைக்குள்ளேருந்து குஞ்சு வர்ரத தடுத்துதானே முட்டையை சாப்பிடுறீங்க ! அப்படீன்னு நீங்க கேட்கலாம்.                                                  இப்போழுதெல்லாம் சேவல் சேராத, உயிர் கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத  முட்டைகள் தான் பண்ணையிலிருந்து வருது. கருவுள்ள முட்டை வேணும்னாதான் சேவல் சேரணும். முட்டை உருவாகக் கோழியோட உடம்புல இருக்கிற சத்தே போதும்.                          பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க. ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு. இனி முட்டைய