Skip to main content

ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

SONY INDIA வின்  RE SELLER'S MEET சென்னையில் ராடிசன் ரிசார்ட்-ல் 15 மற்றும்16-03-2011-ல் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.  சோனி இந்தியாவின்  இந்திய பிரதிநிதி  waki chan  பேசிய போது  ஜப்பான் நாட்டைப்போல் எந்த ஒரு நாடும் சோதனைகளை சந்தித்ததில்லை என்றும் ஆனால் அதில் எல்லாம் இருந்து மீண்டுவந்த ஜப்பான் இதிலிருந்தும் மீளும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
சோகமான முகத்துடன் வாக்கி சான்
conference -ல் சோனியின் தயாரிப்புகளை விளக்கும் வாக்கி சான்


நாங்கள் அங்கு இருக்கும்போது நம்முடைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அழகிரி ஆகியோர் திடீரென வருகை புரிந்தார்கள். அவர்களை சந்திக்க  வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஏதோ  விவாதத்தில்  இருப்பதாக சொல்லப்பட்டது.  மாலையில் தான்  சாதிக் பாட்சா இறந்த விபரம்  பத்திரிகையில் வந்தது. அவர்களுக்கு ராசாவினால் அவர்களின் ராஜ வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.  முதல்வருக்கு அது ராசியான ரிசார்ட்டாம். வசதியானவர்கள என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிந்தது . ஒரு ஆர்வக்கோளாரால்  அதன் வாடகையை கேட்க தோன்றியது.  பத்தாயிரம் முதல் எண்பதாயிரம் வரை (வரிகள்  தனி)  அதில் தங்க வேண்டுமென்றால் ஒன்றில் ராஜாவாக இருக்கவேண்டும் அல்லது ராசாவாக இருக்க வேண்டும் .

எல்லாம் ஒரு விளம்பரம் தான்
.டிஸ்கி: நேரமின்மையால் தான் இப்படி ஒரு ஒப்பேத்தல் பதிவு. ஆதரவு தர வேண்டுகிறேன்.

Comments

இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, சென்னை மற்றும் மாமல்லபுரம் ஸ்டார் ஹோட்டல்கள், ரிசார்டுகளில் ஒரு நாள் வாடகையை விசாரித்து பாருங்கள். நிறைய தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் தினமும் இவைகளில்தான் வந்து கூடி, பேசி கொண்டாடி கும்மாளாமிட்டு ,அனுபவித்து செல்கிறார்கள்என்பது சாதாரண கீழ் நிலையில் உள்ள ஹோட்டல் வேலை காரர்களுக்கும் தெரியும்.ஒரு நாளில் இவர்கள் செலவு செய்யும் தொகையினை கேட்டால் நம் போன்றோருக்கு "வயித்தால " போகும் விஜயன்!
Anonymous said…
நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லை அவர்களுக்கு கூஜா வாக இருந்தால் போதும்
அதனால்தான் நீண்ட இடைவேளையா!
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!
Unknown said…
FOOD:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
கக்கு - மாணிக்கம்:
நாம் சம்பாதிக்கிற வேகத்தை அங்கே செலவாகிற வேகத்துடன் கழித்து பார்த்தால் மிஞ்சுவது பெருமூச்சும், வேதனையும் மட்டுமே.
Unknown said…
"குறட்டை " புலி said...

நீங்கள் சொன்ன இரண்டும் தேவையில்லை அவர்களுக்கு கூஜா வாக இருந்தால் போதும்//

ராசாவுக்கும் கூஜாவாக இருந்தவரின் நிலைமையை பார்த்தீர்களா.சாதிக் பாட்சா சாதிக்க முடியாமல் போய்விட்டாரே.
Unknown said…
சென்னை பித்தன் said...

அதனால்தான் நீண்ட இடைவேளையா!
அந்த நீச்சல் குளத்தில்-எவ்வளவு பெரிது-நீச்சல் அடித்தீர்களா!//
ஒரு மணி நேரம் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம் அவ்வளவுதான்.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...