Skip to main content

Posts

Showing posts from December, 2011

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இது என் பார்வையின் கோளாறு............????????

       இந்தியன் வங்கி மிகவும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் வங்கி.... உலகிலேயே மிகவும் மெதுவான இணைய இணைப்பை கொண்டதாக இருப்பதால் ஒரு ஆள் பணம் கட்டவே ஒரு மணிநேரம் ஆகும். அதனால் அந்த வங்கியில் எப்போ போனா ஆளே இருக்காது என்று PH.D பண்ணிவிட்டேன். உணவு இடவேளைக்கு கொஞ்சம் முன்னால் சென்றால் கூட்டம் இருக்காது. அப்படியே இன்றும் சென்றேன் வழக்கம்போல்.                               எல்லா கவுண்டர்களிலும் ஒரிரு ஆட்களே இருந்தனர். என் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஏதோ வங்கியில் ஒரு லட்சம் டெபாசிட் பண்ணியது மாதிரி. ஒரு கவுண்டரை தேர்ந்தெடுத்து போய் நின்றேன். மிகவும் ஆற அமர என் முன்னால் நின்றவரின் நோட்டுக்களை ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தார். அடுத்தாக என் முறையும் வந்தது.                                மிகவும் அலட்சியமாக என்னிடமிருந்து பணத்தை வாங்கினார். என் மனம் சிந்தித்தது , நானும் மனிதன் தான் அவரும். படிப்பு கூட இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நல்ல மூடில் வங்கி பரீட்ச்சை  எழுதியிருப்பார் அதனால் கவுண்டரின் அந்தப்பக்கம் அவர் இந்தப்பக்

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே...................

    பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.           இந்த படத்தை பார்த்ததும் உலகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் மிகச்சிறந்த விருதான புலிட்சர் விருது இப்படத்திற்கு கிடைத்தது. எனினும் இப் படத்தை எடுத்த போட்டோகிராபர் கெவின் கார்டர் மனம் உடைந்து 3 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கடவுளுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்தது.           அன்புள்ள கடவுளுக்கு : நான் எனக்கு கிடைத்த சாப்பாட்டை இனி எப்போதும் வீணாக்க மாட்டேன். அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பையனை காப்பாற்றும் பட