Skip to main content

Posts

கடவுள் தந்த பரிசு God"s gift

அது ஒரு கனாக்காலம்.. முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இல்லாத காலம்...அன்று ப்ளாக் மற்றும் அதில் உள்ள நட்புகள் தான் உலகம்... சண்டையில் சட்டை கிழியும் என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்தது....முகநூல் வராத வரை. அதன் பின் ப்ளாக மீதான ஆர்வத்தை முகநூல் வெகுவாக குறைத்து...அநேக பளாக நண்பர்கள் முகநூலிலும் வரவே பளாக்கில் வருவது நின்றே போனது எனலாம். இருந்தாலும் ப்ளாக் மீதான மதிப்பு குறையவில்லை .     இனி மேட்டருக்கு வருவோம் இது ஆடி மாசம் ஆஃபர்களுக்கு பஞ்சமில்லாத காலம். வசந்த் அன் கோவில் பொருள் வாங்கினால் 41 கார் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு தினுசாக ஆஃபர்கள் இருக்கும். ஆனால் இந்த பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று  யாரும் பொருட்கள் வாங்குவது கிடையாது. தேவையான பொருளை வாங்கி விட்டு போகிற போக்கில் பரிசு கூப்பனை நிரப்பி பெட்டியில் நிராசையுடன் போட்டுவிட்டு வருவதுதான் வழக்கம். ...அப்புறம் யாருக்கு என்ன பரிசு விழுந்தது என்று நாம் கேட்பதும் இல்லை. நமக்கு பரிசு விழுந்ததாக அவர்கள் சொல்லப்போவதும் இல்லை. எப்பொழுதாவது அக்கடைக்கு போகும்
Recent posts

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும் என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு  தொடர்வது போல் நானும்  பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்..... தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்..... உதாரணமாக................ 1. என் முதல் காதல் அனுபவம்..... 2. என் முதல் திருட்டு....... 3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.                      இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன...... தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள்  வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும். யோசிங்கப்பா.............யோசிங்க.

நுகர்வோருக்கும் வேண்டும் விழிப்புணர்வு.................

இன்று ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்தேன்.  சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது .... போனவாரம் நீங்க முகநூலில் ஒருவருடன் (ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் ) இருக்கிறமாதிரி போட்டோ போட்டிருந்தீர்களே இவருக்கு அவர் நண்பரா என நண்பர்கள் கேட்டதாக கூறி ஒருமாதிரியாக சிரித்தார்.    நானும் அவர்களுக்கு நண்பர்தான் என்ன விஷயம் என்றேன் இல்லை சும்மாதான்  என்று சமாளித்தார்.  சும்மா சொல்லுங்கண்ணே நமக்குள் தானே என்றேன். அப்பொழுதுதான்  அவர் தன் மனக்கசப்பை கொட்ட துவங்கினார்.                         பாவப்பட்ட மக்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் துவம்சம் செய்கிறார்கள்,பல்காரங்களை ரோட்டில் கொட்டுகிறார்கள். அப்படியென்றால்  பெப்சியை தடை செய்ய வேண்டியதுதானே சீறினார் . அப்பாடா அப்படி வாங்க வழிக்கு என்று மனதிற்குள் நினைத்தவாரே நிலமையை விளக்க துவங்கினேன்.                            முதலில் சுகாதாரம் என்ற விஷயத்தில் பாவம் பணக்காரன் என்ற பாகுபாடு ஒன்றும் சட்டத்திற்கு கிடையாது.  யார் தவறு செய்தாலும் சட்டத்திற்குட்பட்டுதான்  அரசு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கின்றனர். பாவப்பட்டவன் என்பதற்காக  அவன் கலப்படம் செய்வதை  அல்லது அ

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன

”நடுவுல கொஞ்சம் வாழ்க்கையக்காணோம்”

நேற்று தற்செயலாக வழியில் என் நண்பரை சந்தித்தேன். அவர் வட்டிகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்ன சார் கோவை சென்றதாக கேள்விப்பட்டேனே என்றேன். ஆமா விஜயன் கடந்த மூன்று வருடங்களாக புதுவருடத்தின் துவக்கம் ஜக்கி வாசுதேவின்  ஆசிரமத்தில்தான் என்றார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் வாயிலாக இமாலயம் சென்று வந்தார். மிகவும் முக்கியமான,  அனைவரும் பார்க்க வேண்டிய வித்தியாசமான இடம், பணம் இருந்தாலும் பார்த்திட முடியாது.  உடல் ஒத்துழைக்கும்போது பார்த்துவிடுவோம் என்றுதான்  சென்றேன் என்றார்.                  பிறகு பேச்சு தொழிலைப்பற்றி திரும்பியது. இன்றைய காலகட்டத்தில் அது யாருடைய தொழிலாக இருந்தாலும்  சரி போட்டி மிகுதியால் லாபம் குறைந்துவிட்டது. பழைய மாதிரி ஓடியாடி வேலை செய்யும் வயதும் போய்விட்டது. அதனால் ஓரிரு வருடத்தில் இருக்கிற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என்றார்.                 அவருக்கு ஒரே பையன் தான் பொறியியல் படிக்கிறார். அடுத்து மேற்படிப்புக்காக அவனை ஜெர்மனியில் MS  படிக்க வைக்க எனக்கு ஆசை. அவனுக்காக கல்விக்கடன்  வாங்கினேன் அதையும் இன்னும

விளம்பரம் என்னும் மாயஜாலம்

டிவியில் விளம்பர படம் பார்க்கும்போது அதன் பின்னால் இருக்கும் விளம்பர கம்பனியின் உழைப்பு நமக்கு தெரிவதில்லை. நானும் ஒரு காலத்தில் என் நண்பருடன் விளம்பர படம் எடுக்க போனதுண்டு( உப்புமா கம்பனிதான்).  அப்பொழுதுதான் அதிலுள்ள நுணுக்கங்களை கண்டு வியந்து போனேன்.                  முதலில் அந்த விளம்பரம் புக் செய்ய அந்த வாடிக்கையாளரை சோப்பு போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் தொழில் நுட்பம்.  எல்லா வியாபாரிகளுக்கும் தன் விளம்பரத்தை டிவியில் காண ஆசை இருக்கும். ஆனால் அதன் செலவை (சன் டிவி ரேஞ்சுக்கு) அதிகமாக கற்பனை பண்ணி வைத்திருப்பதால் அதை பற்றி ஆலோசிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் நிற்கிறோம்.... மிகவும் குறைந்த செலவில் அதை எடுத்து ( அதற்க்கென்று ஒரு டூபாக்கூர் கான்செப்ட் உருவாக்கி)  கொடுத்து அவர்களின் கனவை நனவாக்குகிறோம். அந்த விளம்பரம் அகில உலகமெங்கும் வரும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிக்கும் வேளையில்   அவர்கள் கேபிள் டிவி ஏரியாவையே  தாண்டாது என்பது எங்களுக்கு பணம் செட்டில் செய்த பிற்பாடுதான் அவர்களுக்கு தெரியும்.                   விளம்பரம் செய்வதனால் என்ன பயன் என்று வி