Skip to main content

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு  தொடர்வது போல் நானும்  பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்.....
தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்.....


உதாரணமாக................

1. என் முதல் காதல் அனுபவம்.....


2. என் முதல் திருட்டு.......


3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.


                     இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன......

தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள்  வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.

யோசிங்கப்பா.............யோசிங்க.


Comments

நல்லது... அடுத்த வாரம் ஒன்றை ஆரம்பித்து விடுவோம்..!
எனது முதல் பேருந்து பயணம், ரயில் பயணம், விமானம் பயணம், பள்ளியில் முதலில் சேர்ந்தது, முதல் பைக் விபத்து, டிராபிக் போலீஸுக்கு லஞ்சம் குடுத்து தப்பிச்சது, முதல் போலீஸ் ஸ்டேசன் அனுபவம், கிணத்துக்குள்ளே அம்மிணியின் சோப்பை எடுத்து கொடுத்தது எப்படி முதல் அனுபவம் ஹி ஹி...போதுமா இன்னும் வேணுமா ?
என் முதல் காதல் அனுபவம்.....//

ஏற்கனவே உலைக்கை அடி போன்ல வாங்கிட்டு இருக்கேன் இனி இது வேறயா ?
என் முதல் திருட்டு.....//

டீச்சரின் பேனாவை லவட்டியது ஹி ஹி....
நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.//

என்னய்யா எனக்கு ஆப்பு வைக்க சதி நடக்குறாப்ல இருக்கே.
தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள் வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.//

அப்போ "முதல் கில்மா படம் அனுபவம்" ஒன்றே போதும் ஹா ஹா ஹா ஹா....சிபி அண்ணன் சொல்ல சொன்னான்.
நாங்க நகம் கடிக்க ஆரம்பிச்சிட்டோம் ..அதான் யோசிக்கிறோம் விஜி!மூழ்கி முத்தெடுத்து அனுப்புகிறோம.
ரொம்ப விவகாரமான விஷயமா இருக்கும்போல!
//MANO நாஞ்சில் மனோ said...
நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.
//////////////////////////////

என்னய்யா எனக்கு ஆப்பு வைக்க சதி நடக்குறாப்ல இருக்கே.//
நாங்க வேற தனியா வைக்கணுமா! ஹா ஹா ஹா
//யோசிங்கப்பா.............யோசிங்க.//
ரொம்பத்தான் யோசிக்க விடுறீங்க. ஹா ஹா ஹா

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந