Skip to main content

கடவுள் தந்த பரிசு God"s gift

அது ஒரு கனாக்காலம்.. முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இல்லாத காலம்...அன்று ப்ளாக் மற்றும் அதில் உள்ள நட்புகள் தான் உலகம்... சண்டையில் சட்டை கிழியும் என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்தது....முகநூல் வராத வரை. அதன் பின் ப்ளாக மீதான ஆர்வத்தை முகநூல் வெகுவாக குறைத்து...அநேக பளாக நண்பர்கள் முகநூலிலும் வரவே பளாக்கில் வருவது நின்றே போனது எனலாம். இருந்தாலும் ப்ளாக் மீதான மதிப்பு குறையவில்லை.

    இனி மேட்டருக்கு வருவோம்
இது ஆடி மாசம் ஆஃபர்களுக்கு பஞ்சமில்லாத காலம். வசந்த் அன் கோவில் பொருள் வாங்கினால் 41 கார் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு தினுசாக ஆஃபர்கள் இருக்கும். ஆனால் இந்த பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று  யாரும் பொருட்கள் வாங்குவது கிடையாது. தேவையான பொருளை வாங்கி விட்டு போகிற போக்கில் பரிசு கூப்பனை நிரப்பி பெட்டியில் நிராசையுடன் போட்டுவிட்டு வருவதுதான் வழக்கம். ...அப்புறம் யாருக்கு என்ன பரிசு விழுந்தது என்று நாம் கேட்பதும் இல்லை. நமக்கு பரிசு விழுந்ததாக அவர்கள் சொல்லப்போவதும் இல்லை. எப்பொழுதாவது அக்கடைக்கு போகும் பொழுது பரிசு வாங்கியவர்களின் படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள் நாமும் அதை பெருமூச்சுடன் பார்த்து நகர்வோம். இதுதான் வாடிக்கை  அப்படித்தானே..

    ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் பரிசு கூப்பனை நிரப்பும் போது மிகுந்த நம்பிக்கையுடன் நிரப்புவது வழக்கம். அப்புறம் அந்த கூப்பனை மிகுந்த சிரத்தையுடன் குலுக்கல் வரை பாதுகாத்து வருவேன்...ஆனால் இதுவரை  ஒரு குண்டூசி கூட பரிசாக கிடைத்ததில்லை.
           என் மனைவிக்கு இம்மாதிரி நம்பிக்கை எதுவும் கிடையாது. ஆனால் அதிர்ஷ்டம் அங்கேதான் குடியிருக்கும் போலும். வழக்கம்போல பள்ளி விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு சென்ற போது ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றபோது பரிசு கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்... மனைவி உட்பட உடன் சென்ற நாலு பேரும் தத்தம் பெயர்களில் கூப்பனை நிரப்பி  கொடுத்து வந்தார்கள்... வீட்டில் வந்து துணியை பிரித்த கையோடும் பில்லும் கூப்பனும் வழக்கம்போல் கவருடன் குப்பைக் கூடைக்கு சென்றது.அங்கே தான் விதி விளையாடியது.

ஒரு மாதம் கழித்து என் மனைவிக்கு ஒரு கார் பரிசு விழுந்ததாக செய்தி வந்தது. அதுவும்  வீட்டுக்கே வந்து சொன்னார்கள். காரணம் கூப்பனில் எழுதிக் கொடுத்த போன் நம்பர் கூட பழுதாகிப்போனது. மேலும் கையில் கூப்பனும் இல்லை. வாங்கிய பில்லும் இல்லை என்றாலும் வருவது வழியில் தங்காது என்பார்கள்... பொதுவாக எனக்கெல்லாம் அது கெட்ட விஷயத்தில் தான் நடக்கும். ஆனால் முதன்முறையாக நல்ல விஷயத்தில் வர வேண்டியது வழியில் தங்காமல் வந்து சேர்ந்தது. எல்லாம் இறைவன் செயல். ஆம் அது கடவுளின் விருப்பம்.

Comments

Kesava Pillai said…
யோவ்,கார் கிடைச்சுதா இல்லையா? புரியும் படியா நம்ம என்னைக்கு பேசியிருக்கோம் !!
Unknown said…
கிடைச்சிரும்....விரைவில்... கேரளாவில் ரெஜிஸ்ட்ரேசன் நடந்திட்டிருக்கு. முடிந்ததும் கொண்டு வரணும்.
வாவ்...மிக்க மகிழ்ச்சி விஜி.God's gift from ggod's country.இனி எல்லாம் சிறப்பு!

Popular posts from this blog

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும் என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு  தொடர்வது போல் நானும்  பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்..... தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்..... உதாரணமாக................ 1. என் முதல் காதல் அனுபவம்..... 2. என் முதல் திருட்டு....... 3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.                      இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன...... தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள்  வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும். யோசிங்கப்பா.............யோசிங்க.