Skip to main content

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே...................


    பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.


          இந்த படத்தை பார்த்ததும் உலகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் மிகச்சிறந்த விருதான புலிட்சர் விருது இப்படத்திற்கு கிடைத்தது. எனினும் இப் படத்தை எடுத்த போட்டோகிராபர் கெவின் கார்டர் மனம் உடைந்து 3 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கடவுளுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்தது.


          அன்புள்ள கடவுளுக்கு : நான் எனக்கு கிடைத்த சாப்பாட்டை இனி எப்போதும் வீணாக்க மாட்டேன். அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பையனை காப்பாற்றும் படியும் இந்த துயர நிலையிலிருந்து அவனை மீட்குமாறும் நான் வேண்டிக்கொள்கிறேன்.நாங்கள் இனிமேல் உலகில் நடப்பதைகூர்ந்து கவனிப்போம். எங்களை பற்றி மட்டுமே கவனித்துக்கொண்டிருந்க்க மாட்டோம். இந்த படத்தை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை எங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். இனி ஒருபோதும் பிறருக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் வைத்திருக்க மாட்டோம்.


         இக்கடிதத்தை நமது நண்பர்களிடம் காண்பியுங்கள். இந்த உலகில் எங்கு யார் துயரங்களை அனுபவித்தாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யட்டும். யாரெல்லாம் சாப்பாட்டை வீணாக்குகிறார்களோ அவர்களிடம் இப்படத்தை காண்பியுங்கள். அவர்கள் இதைப்பற்றி நினைத்து பார்க்கட்டும்

Comments

மனதை நெகிழச் செய்த பதிவு..
வணக்கம் அண்ணா

அவர் வரைந்த கடிதத்தை திரும்ப திரும்ப வாசிக்கிறேன்

என்று இந்த உலகம் மாறு என்று..

படிப்பவர் நெஞ்சில் பதிகிறது அவரது கடிதம்
நல்லவிசயம் ,இன்னைக்குதான் நானும் இந்த விஷயம் பற்றி ஒரு பதிவு எழுதினேன்.இந்த பதிவிற்கான லில்கை எனது பதிவில் கொடுத்துள்ளேன்.

நன்றி!
இந்த படத்தை பார்த்த அதிர்ச்சி இவ்வளவு நாள் ஆன பின்னும் நெஞ்சில் இருக்கிறது. இதை ஒத்த ஒரு பதிவு தயார் செய்து வைத்திருக்கிறேன் நாளை கண்டிப்பாக பாருங்க
Unknown said…
வெளங்காதவன் :வருகைக்கு கருத்திற்க்கும் நன்றி.
Unknown said…
* வேடந்தாங்கல் - கருன் *!// வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.
Unknown said…
சம்பத் குமார் : வணக்கம் தல. உலகத்துல என்னவெல்லாமோ நடக்குது. ஒரு படம் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது.
Unknown said…
கோகுல் said...கூகுள் அண்ணனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
rufina rajkumar: மேடம் கண்டிப்பா எழுதுங்க.மிகவும் பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம் இது.
புலிட்சர் விருது கிடைத்த சில நாட்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதுசரி இது பழைய கதையாயிற்றே விஜி. முக்கியமான செய்தி என்னவென்றால் அவர் தற்கொலை செய்துகொண்ட பின்னர்தான் இந்த படமே மிகபிரபலமாயிற்று. பல பெரிய "உலக தலைவர்களை " வாய் விட்டு கதறவைத்த படம் இது. ஆனாலும் ஒன்றும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பதே உண்மை.
Anonymous said…
மனம் கனக்கிறது

முடிந்தவரை நாம் அனைவரும் பொருட்களை சேதப் படுத்துவதை தவிர்ப்போம் இந்த புது வருடதிலிருந்தாவது..
நல்ல பதிவு

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...