Skip to main content

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே...................


    பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார்.


          இந்த படத்தை பார்த்ததும் உலகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் மிகச்சிறந்த விருதான புலிட்சர் விருது இப்படத்திற்கு கிடைத்தது. எனினும் இப் படத்தை எடுத்த போட்டோகிராபர் கெவின் கார்டர் மனம் உடைந்து 3 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கடவுளுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்தது.


          அன்புள்ள கடவுளுக்கு : நான் எனக்கு கிடைத்த சாப்பாட்டை இனி எப்போதும் வீணாக்க மாட்டேன். அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பையனை காப்பாற்றும் படியும் இந்த துயர நிலையிலிருந்து அவனை மீட்குமாறும் நான் வேண்டிக்கொள்கிறேன்.நாங்கள் இனிமேல் உலகில் நடப்பதைகூர்ந்து கவனிப்போம். எங்களை பற்றி மட்டுமே கவனித்துக்கொண்டிருந்க்க மாட்டோம். இந்த படத்தை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை எங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். இனி ஒருபோதும் பிறருக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் வைத்திருக்க மாட்டோம்.


         இக்கடிதத்தை நமது நண்பர்களிடம் காண்பியுங்கள். இந்த உலகில் எங்கு யார் துயரங்களை அனுபவித்தாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யட்டும். யாரெல்லாம் சாப்பாட்டை வீணாக்குகிறார்களோ அவர்களிடம் இப்படத்தை காண்பியுங்கள். அவர்கள் இதைப்பற்றி நினைத்து பார்க்கட்டும்

Comments

மனதை நெகிழச் செய்த பதிவு..
வணக்கம் அண்ணா

அவர் வரைந்த கடிதத்தை திரும்ப திரும்ப வாசிக்கிறேன்

என்று இந்த உலகம் மாறு என்று..

படிப்பவர் நெஞ்சில் பதிகிறது அவரது கடிதம்
நல்லவிசயம் ,இன்னைக்குதான் நானும் இந்த விஷயம் பற்றி ஒரு பதிவு எழுதினேன்.இந்த பதிவிற்கான லில்கை எனது பதிவில் கொடுத்துள்ளேன்.

நன்றி!
இந்த படத்தை பார்த்த அதிர்ச்சி இவ்வளவு நாள் ஆன பின்னும் நெஞ்சில் இருக்கிறது. இதை ஒத்த ஒரு பதிவு தயார் செய்து வைத்திருக்கிறேன் நாளை கண்டிப்பாக பாருங்க
Unknown said…
வெளங்காதவன் :வருகைக்கு கருத்திற்க்கும் நன்றி.
Unknown said…
* வேடந்தாங்கல் - கருன் *!// வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.
Unknown said…
சம்பத் குமார் : வணக்கம் தல. உலகத்துல என்னவெல்லாமோ நடக்குது. ஒரு படம் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது.
Unknown said…
கோகுல் said...கூகுள் அண்ணனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
rufina rajkumar: மேடம் கண்டிப்பா எழுதுங்க.மிகவும் பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம் இது.
புலிட்சர் விருது கிடைத்த சில நாட்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதுசரி இது பழைய கதையாயிற்றே விஜி. முக்கியமான செய்தி என்னவென்றால் அவர் தற்கொலை செய்துகொண்ட பின்னர்தான் இந்த படமே மிகபிரபலமாயிற்று. பல பெரிய "உலக தலைவர்களை " வாய் விட்டு கதறவைத்த படம் இது. ஆனாலும் ஒன்றும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பதே உண்மை.
Anonymous said…
மனம் கனக்கிறது

முடிந்தவரை நாம் அனைவரும் பொருட்களை சேதப் படுத்துவதை தவிர்ப்போம் இந்த புது வருடதிலிருந்தாவது..
நல்ல பதிவு

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                                              *********************************** கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் ! பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.                                             *********************************** பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம