Skip to main content

கதவுகள் இல்லா அதிசய கிராமம் (அக்கிரமம் .......?)

                மீபத்தில்  ஷிர்டி சாயிபாபா கோயிலுக்கு போயிருந்தோம்.  அப்பொழுது அதன் அருகில்  சிக்னாபூர் என்ற இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் இருப்பதாகவும் அது ரொம்ப விசேஷம்  என்றும் சொன்னார்கள்.  கால அவகாசம் இருந்ததால் போகலாம் என்று  புறப்பட்டோம்.  நாங்கள் ஆறு பேர் இருந்ததால் (அதில் 4 பேர் பிரம்மச்சாரிகள்) ஸ்கார்பியோ காரில் போகிற வழியில் கார் ஓட்டுனர் அந்த கோயிலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
                                                      


            அந்த கோயில் அமைந்துள்ள கிராமத்தில்  எங்கும் எதிலும் கதவுகளே கிடையாதாம் (கேட்பது புரிகிறது  வங்கி உட்பட) .  யாரப்பா அங்கே ?  நீ கேட்பதும் சரிதான் கக்கூஸிலும் கூட கதவுகள் இல்லையாம். காரணம் கேட்டால் அங்கே திருட்டே கிடையாதாம். அடடா நம்ம நாட்டிலே இப்படி ஒரு ஊரா  தெரியாமல் இருந்து விட்டோமே  என்று  வருத்தப்பட்டேன்.
                     னீஸ்வரர் கோயில் வந்த விதம் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அதாவது  ஒரு நாள் சிறுவர் இருவர் மாடு மேய்த்துக்கொண்டு  ஆற்றில் நீர் அருந்த வந்தபோது ஒரு பெரிய கல் தண்ணீரில் மிதந்து வந்ததாகவும், அவர்கள் கையில் இருந்த கம்பால் அதை அடித்தபோது  அதிலிருந்து இரத்தம் வந்ததாகவும் இதை சிறுவர்கள் ஊரில் போய் கூற   ஊர்காரர்கள்  அந்த கல்லை தூக்க முயன்றும்  முடியவில்லையென்றும் கூறினார்.  பின்னர்  ஒருவரின்  கனவில் வந்து ஒரு கோயில் கட்டி அந்த கல்லை பிரதிஷ்டை செய்ய சொன்னதாம். இப்பொழுது  நிறைய பக்தர்கள் வருகிறார்களாம்.(வராதா பின்னே !) பக்தர்களின்  அலைபேசியை திருடிய ஒரு பெண்ணிற்க்கு கண் பார்வை போய்விட்டதாம். (என்ன ஒரு பில்டப்பு). வரும் வழியில் (மாட்டு செக்கில் ஆட்டிய) கரும்புச்சாறு குடித்தோம்.  இனி சீரியஸ் மேட்டர்  கோயிலுக்கு போகும்போது நாம் உடுத்த  அனைத்து துணிகளையும்  வண்டியில் வைத்துவிட்டு  காவி துணி மட்டும் உடுத்து அங்கேயே குளித்து ஈரத்துணியுடன் செல்ல வேண்டும். குளித்த பிறகு யாரிடமும் பேசவோ, யாரையும் தொடவோ கூடாது. குறிப்பாக பெண்களை  தொடவே  கூடாது. (பிரம்மச்சாரிகள் அதிகம் இருந்ததால் அப்படி சொல்லியிருக்க கூடும்.) அந்த சாமியை கிண்டல் செய்தவர்களின் வண்டி விபத்தில் கவிழ்ந்து விட்டதாக சொல்லி ஒரு வண்டியையும் காட்டி தந்தார்.  எல்லாம் சொல்லிமுடிக்கவும் வண்டி போய் சேரவும் சரியாக இருந்தது.   வண்டியை பார்க் செய்தவுடன் ஒரு கடைக்காரர்  அனைவருக்கும்  இலவசமாக காவி துண்டு வழங்கினார்.
                   ன்ன இருந்தாலும் பூஜை சாமான்கள் வாங்க வேண்டும் அதை என்னிடம் வாங்கினால் போதும் என்றார். (எங்களுக்கு அவருடைய  நேர்மை மிகவும் பிடித்திருந்தது இதே நேரம் நம் ஊராக இருந்தால் இதற்க்கும் பணம் வாங்கி இருப்பார்கள் என நினைத்துக்கொண்டோம்.) . ஒரு பக்கம் பயம் ஏனென்றால்  புது வண்டி ஆகையால் நாங்கள் வந்த வண்டியில் நம்பர் கூட கிடையாது. மறுபக்கம் கையில் உள்ள காசு, அலைபேசி எல்லாவற்றையும் வண்டியில் வைத்து செல்லவேண்டும். சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது வண்டி இல்லை என்றால் எங்கள் பாடு அதோகதிதான்.
                        ருவிதமாக எல்லோரும்  உடைகளை களைந்து காவி உடுத்தி, குளித்து  பூஜை சமான் வாங்க சென்றோம்(அவர்கள்  சொன்னபடி நாங்கள் யாரும்  பேசவோ,தொடவோ இல்லை)  எல்லோருக்கும்  பூஜை தட்டு தந்தார். அதில் ஒரு பத்தி,ஒரு குதிரை லாடம்,ஒரு குரளி வித்தை காட்டும் பொம்மை போல ஒரு பொம்மை,ஒரு வெள்ளி காசு ஒரு சிறிய கருப்பு துணி ஆகியவை அடங்கும். எனக்கு எதோ பொறி தட்ட விலையை கேட்டேன் (சைகையில்தான்).  அவன் சொன்ன விலைதான்  அவன் சொன்ன எல்லா கண்டிஷன்களையும் உடைத்தெறிந்தது. ஆம் அவன் கேட்டது மூவாயிரம் ரூபாய்.(டேய் இப்படி ஏமாற்றுகிற  உங்க ஊர்ல கதவு இருந்தா என்ன இல்லாட்டி என்ன ?)
              ங்களை தலைமை ஏற்று அழைத்து வந்த பிரம்மச்சாரி  அவனிடம்  எங்களுக்கு உன்னிடம் இருந்து ஒன்றும் வேண்டாம் காவி துணியின் வாடகையை பெற்றுக்கொள் என்றார், அவன் மறுக்கவே எல்லாரும் அவனுடைய துணியை அவிழ்த்து கொடுத்தோம்.(அவன் முகத்தில் ஈயாடவில்லை) அதற்க்கு அவன் சனீஸ்வரர் உங்களை தண்டிக்க போகிறார் என்றான். நாங்கள் எங்கள் வாழ்க்கையையே கடவுளுக்காக கொடுத்தவர்கள்  எஙகளுக்கு எந்த பயமும் இல்லை என்றார் பிரம்மச்சாரி. காவி துணிக்கான  பணத்தை அவன் கண் முன்னே இரு சிறுவர்களுக்கு கொடுத்தோம்.அந்த சிறுவர்களின் முகமலர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. பின்னர் எங்களது உடையிலே  கோயிலுக்கு சென்றோம். தொழுதுவிட்டு வந்தோம்.அங்கே காவி உடுத்த நிறைய பக்தர்களை (ஏமாளிகளை) காண முடிந்தது.
                  னி செல்ல விரும்புவர்கள் வீட்டிலிருந்தே  காவி துண்டு ம்,கொஞ்சம் நல்லெண்ணெய் கொண்டுபோனால்  நீங்களே உங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம். ஏமாறாமல் சிங்கம் போல திரும்ப வரலாம். அங்கேயே எண்ணெய் வாங்கினால் பாமாயில் அபிஷேகம் செய்த பாவம் இலவசமாக கிடைக்கும்.

Comments

அங்கேயே எண்ணெய் வாங்கினால் பாமாயில் அபிஷேகம் செய்த பாவம் இலவசமாக கிடைக்கும்.//

:)..

ம்..கலக்குங்க..
நான் புனேவில் பணி புரிந்த காலத்தில்,மூன்று முறை ஷீரடி சென்றிருக்கிறேன்.ஒரு முறை சனி சிக்னாபூரில் இறங்கி வணங்கி விட்டுச் சென்றேன். அவ்வளவுதான். அவசரப் பயணத்தில் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?
தகவல்களுக்கு நன்றி
Unknown said…
பதிலுக்கு நன்றி சென்னைபித்தன் சார்.
Anonymous said…
உபயோகமான பதிவு விஜயன் சார். இதே போன்று பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி!
(nanbendaa.blogspot.com, madrasbhavan.blogspot.com)

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                                              *********************************** கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் ! பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.                                             *********************************** பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம