Skip to main content

முக்கடல் சங்கமத்தில் புகைப்படபிரியன் சங்கமம் -26.01.2012

முகநூல் புகைப்படப்பிரியன் குழுமத்தின் சார்பில் 26.01.2012 அன்று குமரி முனையில் TRI-SEA HOTEL -ல் வைத்து ”புகைப்பட கலந்துரையாடல் மற்றும் பயிற்சி”  நடைப்பெற்றது. இந்த குழுமத்தை சார்ந்த திரு.மெர்வின் ஆன்டோ தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்.திரு மென்வின் ஆன்டோவை பற்றி நான் பலமுறை எழுத நினைத்து காலம் கடந்து சென்று கொண்டே இருந்தது. அவரைப்பற்றி தனியாக ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் ஒரு நண்பர் குறிப்பிட்ட மாதிரி அவர் ஒரு PHOTO SCIENTIST  என்றே கூறலாம் அந்த அளவிற்க்கு மிகவும் நுட்பமாக புகைப்படத்தை யாரும் சிந்திக்காத புதிய பரிணாமத்தில் எடுப்பதில் வல்லவர். அவரின் தனிப்பட்ட முயற்சி தான் இந்த நிகழ்ச்சி.  அவர் பார்க்க... பழக மிகவும் எளிமையானவர்.செய்யும் தொழிலை மிகவும் அர்பணிப்பு உணர்வோடு செய்பவர்...... என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்....... நீங்கள் அனுமதித்தால்..........

காலை ஒன்பது மணிக்கு Registration துவங்கியது. அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் வந்தவுடன் நிகழ்ச்சி துவங்கியது.
காலையில் நிகழ்ச்சி பங்கேற்ப்பாளர்களின் Registration   நடைபெறுகிறது
நிகழ்ச்சியை திரு ஜவர்கள் ஜி அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சி இனிதே ஆரம்பித்தது
திரு. ஜவகர் ஜி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

திருமதி. இந்திரா ஜெயராம் , சென்னை. குத்துவிளக்கேற்றினார்.


புகைப்படப்போட்டியில் இடம் பெற்ற புகைப்படங்கள்.
திரு.லஷ்மண் ஐயர் அவர்களுடன் திரு.மெர்வின் ஆன்டோ அவர்கள்
அவருடன் Thiru.Lakhsman Iyer (SENTIENT, CHENNAI),.Thiru.Pazhani kumar( (Editor Best photography today),Thiru.Kumar Mullackal (surya graphics, Nagercoil), Thiru Madhu payyan Vellatinkara(Engineer TNEB Ooty) ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

மறைந்த நண்பர் கிப்டனுக்கு மெளன
அஞ்சலி செலுத்தப்பட்டது
அதன் பின் குமரிக்கொழுந்துகள் குழுமத்தை சார்ந்த திரு. கிப்டன் அவர்களின் அகால மரணத்தை முன்னிட்டு அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


திரு. திருவட்டார் சிந்துகுமார் (குமுதம் ரிப்போர்ட்டர்) அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
திருவட்டார் சிந்துகுமார்



திரு.பழனிக்குமார் அவர்கள்(எடிட்டர் பெஸ்ட் போட்டோகிராபி டுடே)
அதன் பின் புகைப்படபிரியனில் பங்குபெற்ற புகைப்பட போட்டியில் பரிசு பெற்றவர்களை வாழ்த்தியும் அவை தேர்ந்தெடுக்கப்பட்தற்க்கான காரணத்தையும் விளக்கினார் திரு பழனிக்குமார் அவர்கள். மேலும் அவர் கூறும் போது புகைப்படங்கள் உலகில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியதுண்டு என்றும் போரையே நிறைவுக்கு கொண்டுவந்த பெருமை அதற்க்கு உண்டு என்றும் குறிப்பிட்டார். உலகதர புகைப்பட போட்டியில் எவ்வாறு ஒரு புகைப்படம் தேர்தெடுக்கப்படுகிறது என்பதையும் அருமையக விளக்கினார். ஒரு மிருகம் அல்லது ஒரு பறவை புகைப்படம் எடுப்பவரைக்கண்டு மிரண்டாலோ அல்லது சீறினாலோ முதல் சுற்றிலேயே அந்த படம் வெளியேறிவிடுமாம். படத்தின் உணர்வு, அந்த படத்தை எடுக்க மேற்கொண்ட உழைப்பு ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமாம். படம் இயல்பு மாறாமல் இருப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். காப்புரிமையை பொறுத்தவரையில் நாம் படத்தை கிளிக்கிய அந்த நொடியில் இருந்து அந்த படம் எடுத்தவர்க்கு சொந்தமாகிவிடுகிறது. காப்புரிமை பெற எந்த ஒரு ஃபாரமும் நிரப்ப வேண்டியதில்லை. ஆனால் அந்த படம் மருத்து சம்பந்தமாகவோ அல்லது கல்விக்காகவோ மற்றும் திரைப்படத்திற்க்காகவோ பயன் படுத்தப்பட்டால் அது காப்புரிமை சட்டத்திற்குள் வருவதில்லையாம்.
இந்தப்படம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நீங்கள் அறிந்ததே.
பல அவார்டுகள் பெற்றும் இந்த புகைப்படத்தால் எடுத்தவரே மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது.
மேலே காண்கிற இரண்டு புகைப்படமும் உலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய புகைப்படங்கள். ஒரு சிறந்த புகைப்படக்கலைஞரால் உலகிற்க்கு என்ன செய்ய முடியும் என்பதற்க்கு இதுபோன்ற படங்கள் சிறந்த உதாரணம். உலகில் நடக்கின்ற துயரங்களை வெட்டவெளிச்சமாக்கி அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க காரணமாகி இருக்கிறார்கள்.
புகைப்படபிரியனில் முதல்,இரண்டு மற்றும் மூன்றாவது பரிசு பெற்ற புகைப்படங்கள்.

அதன் பிறகு கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதாக துவங்கியது. அனைவருடைய புகைப்பட சம்பந்தமான ஐயங்களைப்போக்க சென்னையிலிருந்து திரு.லக்ஷ்மண் ஐயர்( SENTIENT, CHENNAI) அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் தினமலர் மற்றும் அநேக பிரபல தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகை துறையில் பணியாற்றியவர். புகைப்படத்துறையில் நுணுக்கமான அறிவும், அனுபவமும் பெற்றவர். அவர் அனைத்து உறுப்பினர்களின் கேள்விக்கும் நிதானமாக தெளிவாக ஆழமாக மனதில் பதியும் வண்ணம் எளிமையாக விளக்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் சென்னையில் புகைப்பட பள்ளியும் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.லக்ஷ்மண் ஐயர் அவர்கள்

பிறகு நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.



முதல் பரிசை திரு. சுந்தர் ராஜன் அவர்களுக்கு மெர்வின் ஆன்டோ அவர்கள் வழங்குகிறார்
இரண்டாவது பரிசை திரு. மது அவர்களுக்கு திரு. பழனிக்குமார் அளிக்கிறார்.


மூன்றாவது பரிசை திரு. திருவட்டார் சிந்துகுமார் அவர்களுக்கு திரு. லஷ்மண் ஐயர் வழங்குகிறார்.
திரு.லக்ஷ்மண் ஐயர் அவர்களுக்கு நினைவுப்பரிசினை திரு.மெர்வின் ஆன்டோ  முன்னிலையில் திரு ஜவகர் ஜி அவர்கள் வழங்குகிறார்.

சென்னையில் இருந்து கலந்துகொண்ட மிஸ். அஞ்சனா ஜெயராம் அவர்கள் திரு.மெர்வி
ன் ஆன் டோ முன்னிலையில் நினைவு பரிசினை திரு. பழனிகுமார் அவர்களுக்கு வழங்குகிறார்
திரு. லக்ஷ்மண் ஐயருடன் அவர்களுடன் நான்.


திரு.Zoom முரளி அவர்கள்.
Add caption

Mr.Patrick jasper works at NABARD

இப்படி இனிதாக இந்த நிகழ்ச்சி முடிவிற்க்கு வந்தது. கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் ஒரு குடும்பம் போல் பழகி கனத்த இதயத்துடன் பிரியவிடை பெற்றனர்.

Comments

kothai said…
மிகவும் சிறப்பாக உள்ளன. மேலும் வளர என் வாழ்த்துக்கள்..!
Unknown said…
@ kothai: உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
முகநூல் வெறும் பொழுது போக்கும் வலை மட்டுமின்றி,பல பயனுள்ள விசயங்களுக்கு உறுதுணையாக இருப்பது,இந்நிகழ்வின் வழி வெளிக்கொணரப்பட்டுள்ளது!வாழ்த்துக்கள் விஜி!
Unknown said…
@செல்விகாளிமுத்து : உங்களுடைய ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி. மீண்டு(ம்) வருக.
நல்ல பகிர்வு விஜயன். ஆனால், எப்பவும்போல லேட். சாரி.
//ஒரு சிறந்த புகைப்படக்கலைஞரால் உலகிற்க்கு என்ன செய்ய முடியும் என்பதற்க்கு இதுபோன்ற படங்கள் சிறந்த உதாரணம். உலகில் நடக்கின்ற துயரங்களை வெட்டவெளிச்சமாக்கி அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க காரணமாகி இருக்கிறார்கள்.//
உண்மையில் பாராட்டத்தக்க விஷயம். மனமார்ந்த பாராட்டுக்கள்.
Jawaharji said…
நல்ல பதிவு வாழ்த்துக்கள்..
உலகை உலுக்கிய இரண்டு முக்கியமான படங்களையும் பகிர்ந்ததற்கு நன்றி...
அந்த வியட்நாமிய பெண் பேட்டி ஆனந்த விகடனில் பார்த்த நாபகம்.. மற்றைய படத்தை எடுத்தவர் பிள்ளையை காப்பாற்றாமல் படம் எடுப்பதையே குறிக்கோளாக இருந்ததை கண்டித்தவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்..!!!,
Unknown said…
FOOD NELLAI said...
நல்ல பகிர்வு விஜயன். ஆனால், எப்பவும்போல லேட். சாரி// லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவீங்க தெரியும் சார். உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
@ Jawaharji முதல் முறையாக வருகை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.மீண்டும் வருக.
Unknown said…
@காட்டான்
பிள்ளையை காப்பாற்றாமல் படம் எடுப்பதையே குறிக்கோளாக இருந்ததை கண்டித்தவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்..!!!,//

சரியாக சொன்னீர்கள் அதனால் தான் அவர் தற்கொலை செய்தார்.
Unknown said…
மிகவும் அழகான பதிவு...உள்ளதை உள்ள படியே விளக்கிய தன்மை மிகவும் அழகு. வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந