Skip to main content

வாங்க சிரிக்கலாம்..............(நகைச்சுவை விருந்து)


பஸ்ஸில் கண்டக்டரிடம் ஒரு பயணி கேட்டார்: "ஆமாம், ஏன் காலை அகட்டி வச்சு
நிக்கிறீங்க?


கண்டக்டர்: "பேலன்ஸுக்கு. ஆமாம், நீங்களும் ஏன் காலை அகட்டி வச்சு
நிக்கிறீங்க?"


பயணி:"நானும் பேலன்ஸுக்குத தான் நிக்கிறேன். பத்து ரூபாய் குடுத்ததுக்கு
டிக்கட் சார்ஜ் போக மீதி குடுங்க சார்"


..............................................................................................
விவாதத்திலே நேரங்கழித்தல் -
நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்.




.........................................................................................
பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின்
படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்.


நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என
போர்டு போட்டிருக்கே

.................................................................................................

துட்ட வட்டிக்கு விட்டா தண்டலு
துப்பட்டால மனசை விட்டா மென்டலு



..............................................................................................
பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..


மேனேஜர் : அதுக்கு ஏம்மா??


பெண் : நீங்கதானே சொன்னீங்க. மாசமான சம்பளம் தரலாம்னு..


.............................................................................................
சில நேரங்களில் அவமானங்களும் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்..
நமபிக்கையும் பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால்

...........................................................................................
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை
ஆனால் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வதில்லை


...............................................................................................
கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா


..............................................................................................
ஒருத்தர் பஸ்ஸில் பயணப்படும் போது திடீரென் ஓட்டுனர் பிரேக் போட அவர் முன்னால்
நின்ற பெண்மீது இடித்துவிட்டார்.. அவர் சுதாகரித்துக்கொண்டு எழும்முன்...


பெண் : ஏய், நீ என்னப்பண்ணிக்கிட்டிருக்க..?????
நம்மாளு: பஞ்சாப் யூனிவர்ஸிட்டில் பைனல் இயர் B.E.


..............................................................................................
விரும்பும்போது விரும்பினேன் என்பதைவிட
வெறுக்கும்போதும் விரும்பினேன் என்பதே
உண்மை அன்பு




................................................................................................
“இகழ்ச்சி” 
என்னை துணிந்து நில் 
என்றது


“புகழ்ச்சி” 
என்னை பணிந்து செல் 
என்றது.

................................................................................................

டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.


இந்த டானிக்கை சாப்பிடுங்க.


சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?


நல்லா இருமலாம்.



..............................................................................................

கம்பியூட்டரை தட்டினால் அது என்ன நினைக்குமாம்?
இன்டெல் இன்சைட் ; மெண்டல் அவுட்சைட்'ன்னு 

..................................................................................................
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...


நோயாளி: ஏன் டாக்டர்?


டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே



...........................................................................................
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...
·  

...........................................................................................

வாழ்க்கையும் ஆசிரியரும் ஒரே போல


ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.


ஆசிரியல் பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைக்கிறார்
வாழ்க்கை தேர்வை வைத்து ரிசல்ட் மூலம் பாடம் சொல்லித்தருகிறது.

..............................................................................................
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..


நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..


போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..


...............................................................................................

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே.. 
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற??? 
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..
...............................................................................................
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!


................................................................................................

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.


மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.


கணவன் : ???

................................................................................................


குடி போதையில் வண்டி ஓட்டக்கூடாதுனா ,பார்ல எதுக்கு பார்க்கிங் வச்சிருக்காங்க???? 


.குரங்குல இருந்துதான் மனிதன் வந்தான் என்றால் எப்படி குரங்குகள் இன்று வரை இருக்கிறது????


நம்ம நாட்டுல பேச சுதந்திரம் இருக்குனா நாம எதுக்கு செல்லுக்கு bill கட்டணும்??? 


நீலச் சிலுவைச்(Blue cross) சங்கம்னு ஒன்னு இருந்தா இந்த அசைவ ஹோட்டல்லாம் எப்படி நடக்குது??
...

.........................................................................................

ஜாலியான அட்வைஸ் கதை 


டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால், இன்றைய கோட்டா ஓவர்.


பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான். அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள். 


”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல” 
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.


மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான். 


”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை. 


”மிஸ்டர் காரை விட்டு இறங்கு” 
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன். ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”


அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை. 
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”


”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான். 
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.


நீதி


மது அருந்தாதீர்கள். மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்.


................................................................................................



உடல் உறுப்புகளில் எங்காவது வலி ஏற்பட்டால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்கொள் என்பார்கள்


ஆனால் அந்த‌ பல்லுக்கே வலி ஏற்பட்டால் ??


..............................................................................................

அது என்னவோ தெரியவில்லை பசங்க அண்ணான்னு சொல்லும்போது வரும் சந்தோசம் பொண்ணுங்க அண்ணான்னு சொல்லும்போது வருவதில்லை



நன்றி
Ranga nathan

Comments

//கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா////

Experiance?

:-)
Prem S said…
கலக்கல் காமெடி அந்த டாடி அப்பா ஜோக் முடியல கலக்கல்
Unknown said…
யப்பா வெளங்காதவனே உண்மையிலேயே நீ வெளங்காதவன் தான்யா..... ஒரு தங்கத்தை உரசிப்பார்க்கலாமா????
..!!!!!!!!!!!!!!!!
Unknown said…
வருகைக்கு நன்றி பிரேம்.
Unknown said…
வருகைக்கும் கருத்திற்க்கு நன்றி இராஜேஸ்வரி மேடம்.
Unknown said…
கருத்திற்கு நன்றி மாதவன்
பாலா said…
சார் வலி தாங்க முடியல. செம கடி :))))
உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html
vimalanperali said…
நல்ல பதிவாய் இருக்கிறதே/வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந