Skip to main content

ஆதலினால் காதல் செய்வீர்................

இது ஒரு உண்மைக்கதை. இன்று ஒரு பெரியவரை சந்தித்தேன் அவர் தன் மகனின் கதையை கூறினார் அதன் பாதிப்பே இந்த பதிவு


 கதையின் நாயகனின் பெயர் குமரன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,  நாகர்கோயிலை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த குமரன் வீட்டில் உள்ள மற்ற இரு சகோதரர்களைகாட்டிலும் படு சுட்டி.  எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத ஒரு சுபாவம் அவனை மற்றவர்களிடத்திலிருந்த பிரித்து காட்டியது.  அதுவே அவனது வளர்ச்சிக்கு ஊன்று கோலாகவும் இருந்தது.


               கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள் அதுபோல் இவனும் கொஞ்சம் கெட்டு சென்னை பட்டணம் சேர்ந்தான். அங்கே சிறிது சிறிதாக முன்னேறி ஒரு ஒப்பந்ததாரர் (contractor)  ஆனான்.   நல்ல பணம் வர ஆரம்பித்தது அதனூடேயே செல்வாக்கும் வளர்ந்தது. அந்த ஏரியாவில் எல்லா வேலைக்கும் அவனைத்தான் அழைத்தார்கள் நிறைய பேருக்கு செல்லப்பிள்ளையானான். 

             குமரனின் தாய்மாமாவுக்கு ஒரு இளவரசி என்ற மகள் இருந்தாள் அந்த பெண் கேரள தலைநகரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாள்..... பெயருக்கேற்றார்போல் மிகவும் லட்சணமானப்பெண்.  இவனும் அவ்வப்போது ஊருக்கு வரும்போது அவளுக்கு சாரி சுடிதார்...தங்க செயின் போன்ற எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்து வந்தான். வீட்டுக்காரர்களும் ஒன்றும் சொல்லவில்லை . உரிமைப்பட்டவன் தானே...என்று விட்டுவிட்டார்கள். அந்த பெண்ணும் நாளொரு கனவையும் பொழுதொரு எண்ணமுமாக மனதிற்க்குள் காதலை வளர்த்து வந்தாள்.

                      இது இப்படி இருக்க சென்னையில் ஒரு நாள் ஒரு வீட்டிற்க்கு பிளம்பிங் வேலைக்கு சென்றார். அங்கே இருந்த ப்ரியா -வைகண்டதும் இதயம் இனித்தது கண்கள் பனித்தது.... குமரனின் படிப்போ வெறும் +2 , நாயகி B.E..படித்திருந்தாள் நல்ல வசதியான வீடு. 

                          வழக்கம்போல் இந்த காதலுக்கும் கண் இல்லாமல் போனதால் அந்தஸ்து படிப்பு எதுவும் ஒரு மேட்டராக தெரியவில்லை..... இரண்டு பேரும் இணைபிரியா பறவையாக நகரத்தில் பறந்து திரிந்தனர்.....இனி இருவரும் பிரிந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை தன் மெய்யறிவால் உணர்ந்து கொண்டனர். வீட்டில் வேறு வழி இல்லாததால் இருவரையும் சேர்த்து வைத்தனர்.

                         திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் கிராமத்திற்க்கு வந்த போது குமரனின் தாய்மாமன் பெண் இளவரசியும் வந்திருந்தாள்.


 புதுமண தம்பதிகளைக் கண்டதும் ஓ.........வென்று கதறினாள்.... உறவினர்கள் நடந்தது நடந்துவிட்டது மனசை தேத்திக்கொள் என்று சமாதானம் செய்தனர்..... அவளும் அப்பொழுதே ஓடிப்போய் வீட்டின் சமயலைறையில் நுழைந்தவள்   கடைசி வரை வெளியே தலை காட்டவே இல்லை. அவளால் முடிந்த வரைக்கும் அழுது தீர்த்ததுதான் மிச்சம் .

                     புதுமண தம்பதிகள் இனிமையாக வாழ்க்கையை ஆரம்பித்தனர்.  அவள் எள் எனும் முன்பே அவன் எண்ணெய்யானான். அவர்களுக்கு அழகான ஒரு குழந்தையு பிறந்தது. அவளுக்கு வெளிநாட்டில் ஒரு வேலையும் ரெடியானது. குமரன் ஓடியாடி பாஸ்போர்ட் விசா எல்லாம் ரெடியாக்கி அவளை அன்பாக அனுப்பி வைத்தான். அவளும் நல்லமுறையில் சம்பாதிக்க ஆரம்பித்தாள்..... லீவில் சென்னை வந்தாள்.... ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக குமரன்  நடுரோட்டில் வைத்து அடித்துவிட்டான். மேட்டர் பெரிதானது காவல்நிலையம் வரை சென்றது. இனி இவனுடன் வாழ்வது சாத்தியமில்லை என்று ஒரு வரியில் அவள் கூறிவிட்டாள்.

                      குமரனுக்கு இன்றும் அதே செல்வாக்கு ... அதே பணம்...எல்லா வசதியும் இருக்கிறது.... ஆனால் வாழ்க்கை....


 விவாகரத்து முடிந்ததும் அந்த மாமன் மகளுக்கே திரும்பவும் மணமுடித்து வைப்பதற்க்கு மனதில் எண்ணுகிறார் தந்தையார்..... , மாமன் மகளுக்கோ வேறொரு நல்ல வரன் அமைந்திருப்பதாக செய்தி இவர் காதுக்கு வருகிறது.
இதுதான் இதுவரை நடந்தது....... இனி என்ன நடக்கும் அல்லது எது நடந்தால் சரியாக இருக்கும் என்பதை நீங்களே கூட சொல்லலாம்.... உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.....




                         ஆதலினால் காதல் செய்வீர்................

Comments

Unknown said…
என்னைப் பொறுத்தவரை...அந்த மனிதன் வேறு ஒருவரை திருமணம் முடிப்பது நன்று...

என்னய்யா...இது...பெண்ணை மட்டும் “செகண்ட் ஹேண்ட்” என்று சொல்லும் ஆண் வர்க்கம்...ஆணுக்கு மட்டும் என்ன எப்பவுமே” ஃபர்ஸ்ட்: ஹேண்டா!
காதலில் பிளஸ்சும் இருக்கு மைனஸ்சும் இருக்கு, என்னதான் இருந்தாலும் வீட்டில் வைத்து நாலு சாத்துறதை விட்டுட்டு நடு ரோட்டில் அடிப்பது என்பது கீழ்த்தரமானது.
பையன் கொஞ்சம் சபலப் புத்தி போல் தெரியுது...
பாலா said…
இங்கே பிரச்சனை காதல் செய்யாதது அல்ல. மனைவியுடன் விட்டுக்கொடுத்து வாழாதது. அப்படி பார்த்தாலும் மனைவியை காதல் செய்வீர் என்றும் கொள்ளலாம். :)
ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக குமரன் நடுரோட்டில் வைத்து அடித்துவிட்டான்/////பிரச்சனை எதுவானாலும் நடுரோட்டிலா பஞ்சாயத்து பண்ணனும்??பெண்ணுக்கு(ம்)தன்மானம் இருக்கே?
Kumari said…
Thank you Vijayan for picturing today's youngster mind.
First and foremost I feel sad for the elderly person (Kumaran's Thanthai). Kumaran has no clue, what true love is? It's something beyond what he had felt (attraction towards woman). I pity Ilavarasi to have trusted a pervert like him. Great Escape! she didn't marry him. He did prove himself again by ill treating a woman in public. I don't think he deserves a re-marriage. I support Wiki-Ulagam and Koodal Bala.
ஆத்மா said…
என்னைப்பொருத்த வரை மாமன் பொண்ணை அவர் மறுமணம் புரிவது சிறந்ததாக இல்லை...குமரனுடைய நினைவுகளை அழித்துவிட்டு இப்போதுதான் இளவரசி ஒரு நிலைக்கு வந்துள்ளாள் அவள் விடயத்தில் குமரன் மூக்கை நுழைப்பது பிடித்தமான விடமல்ல.

மாறாக இளவரசியிடமிருந்து குமரனுக்கு சாதகமான கருத்து வந்தாள் அவள் விடயத்தில் இவர் நுழையலாம்
ஆத்மா said…
என்னதான் பிரச்சனை என்றாலும் மனைவியிடம் நடந்து கொள்ள ஒரு முறையை கணவன் எடுத்துக் கொள்ள வேண்டும்..

காதலித்துதானே திருமணம் செய்தார்...பிரியப்படும் திருமணங்களில் காதல் திருமணங்கள் தான் அதிகமாக இருக்கின்றன.

விட்டுக்கொடுப்பு ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கும்

பசங்க படம் சிறந்தொரு உதாரணம்
Unknown said…
விக்கியுலகம் said.

நன்றி விக்கி...உங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.
Unknown said…
MANO நாஞ்சில் மனோ said...
காதலில் பிளஸ்சும் இருக்கு மைனஸ்சும் இருக்கு, என்னதான் இருந்தாலும் வீட்டில் வைத்து நாலு சாத்துறதை விட்டுட்டு நடு ரோட்டில் அடிப்பது என்பது கீழ்த்தரமானது.///காதலுக்கு மனோ சப்போர்ட் பண்ணுவதில் காரணம் இருக்கிறது என்றாலும் மனைவியை வீட்டிலோ அல்லது ரோட்டிலோ அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கருத்துக்கு நன்றி மனோ.
Unknown said…
koodal bala said...
பையன் கொஞ்சம் சபலப் புத்தி போல் தெரியுது...///
கொஞ்சம் இல்லை ரொம்ப .... இல்லையென்றால் காதல் வருமா என்ன??
Unknown said…
பாலா said...
இங்கே பிரச்சனை காதல் செய்யாதது அல்ல. மனைவியுடன் விட்டுக்கொடுத்து வாழாதது. அப்படி பார்த்தாலும் மனைவியை காதல் செய்வீர் என்றும் கொள்ளலாம். :)///

ஆம் மனைவியை காதல் செய்வீர்.
Unknown said…
செல்விகாளிமுத்து said...
ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக குமரன் நடுரோட்டில் வைத்து அடித்துவிட்டான்/////பிரச்சனை எதுவானாலும் நடுரோட்டிலா பஞ்சாயத்து பண்ணனும்??பெண்ணுக்கு(ம்)தன்மானம் இருக்கே?///

சரியான கேள்வி நியாயமான கேள்வி
Unknown said…
Kumari said...
Thank you Vijayan for picturing today's youngster mind.
First and foremost I feel sad for the elderly person (Kumaran's Thanthai). Kumaran has no clue, what true love is? It's something beyond what he had felt (attraction towards woman). I pity Ilavarasi to have trusted a pervert like him. Great Escape! she didn't marry him. He did prove himself again by ill treating a woman in public. I don't think he deserves a re-marriage. I support Wiki-Ulagam and Koodal Bala.///
yes he is not capable of doing remarriage... thank u kumari.
Unknown said…
சிட்டுக்குருவி said...
என்னைப்பொருத்த வரை மாமன் பொண்ணை அவர் மறுமணம் புரிவது சிறந்ததாக இல்லை...குமரனுடைய நினைவுகளை அழித்துவிட்டு இப்போதுதான் இளவரசி ஒரு நிலைக்கு வந்துள்ளாள் அவள் விடயத்தில் குமரன் மூக்கை நுழைப்பது பிடித்தமான விடமல்ல.

மாறாக இளவரசியிடமிருந்து குமரனுக்கு சாதகமான கருத்து வந்தாள் அவள் விடயத்தில் இவர் நுழையலாம்///
என்னை பொறுத்தவரை இளவரசி இன்னும் அவர் நினைப்பில் இருப்பார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் பெண்கள் ஆண்களைப்போல் அவ்வளவு எளிதில் நினைப்பதும் இல்லை மறப்பதும் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.
ஆதலினால் காதல் செய்வீர்................எனக்கு ரொம்பவே பிடிச்ச சுஜாதாவின் நாவல்-ஜெமோ,அரிஸ்,கிட்டா னு....நான் விழுந்து விழுந்து சிரிச்ச கதாபாத்திரங்கள்...எனக்கு ரொம்பவே பிடிச்ச தலைப்பில் எழுதிருக்கேங்க விஜி அண்ணா...

ஓகே...என் அணுகுமுறை...

* இளவரசி கிட்டே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எதுவும் கம்மிட் பண்ணாத வரை குமரன் பண்ணது கிரைம் இல்லை...அத்தை பொண்ணு,மாமன் பையன் உறவில் எப்பவும் சில crush இருப்பது தவிர்க்க முடியாத விஷயங்கள் தான்...

*எனக்கேன்னேவோ குமரன்-பிரியா வே சில ஈகோ விஷயங்களை பேசி தீர்த்துட்டு பிரெஷா வாழ்க்கையை தொடங்கலாம்...இது ஈகோ,possessiveness இப்படி ஏதாவது விஷயத்தில் தான் ஆரம்பிச்சிருக்கணும்...ஸோ...மனசு விட்டு பேசிக்கிரதால் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படலாம்...குழந்தை எதிர்காலமும் இருக்கு இல்லையா...

*ரோடு இல் வச்சு அடிச்சது தப்பு தான்...காதலுக்காக குமரன் சேம் ரோட்டில் வச்சு காலில் விழுந்து கூட ப்ரியாவை சரி பண்ணிடலாம்...இதெல்லாம் வாழ்க்கையின் சின்ன சின்ன டெக்னிக்ஸ்...இறங்கி போற எந்த விஷயமும் நிம்மதி,மகிழ்ச்சியில் தான் முடியும்...இதை சரியான நபர் ரெண்டு தரப்பிலும் எடுத்து சொன்னால் சரியான பாதையில் போகமுடியும் அவங்க...

*இளவரசியை இன்னும் வீட்ல ட்ரை பண்ணறது உலக முட்டாள் தனம்...அது சரியும் இல்லை...காதல் செய்றது தப்பு இல்லை...அந்த காதலை எப்படி கடைசி வரை உருக்குலைக்காமல் கொண்டு போறோம்ன்கிறது தான் விஷயமே....ஆதலினால் அனைவரும் காதல் செய்வீர்..;-)

அதென்ன அண்ணா...போட்ட படங்கள் எல்லாமே வெள்ளைக்காரிங்க போட்டோ...:-)) கொஞ்சம் கருப்பு அழகிங்க போட்டோஸ் ம் போடுங்க..;-)
Unknown said…
கருத்திற்க்கு நன்றி ஆனந்தி. அவர்கள் சேருவது என்பது நடக்காத காரியம்.பெண் அவ்வளவு தீர்மானமாக இருக்கிறாள்.ஆரம்பத்தில் ஸ்டேட்டஸ் பார்க்காத காதல் பிறகு விழித்துக்கொள்கிறது. காதல் உங்களுக்கு பிடிக்க காரணம் இருக்கு ஆனால் எனக்கு காரணம் இல்லாமலேயே பிடிக்காது. வெள்ளைப்படம் போட்டால் எல்லோருக்கும் பிடிக்கிறது.கருப்பு படம் தப்பில்லைதான். இதில் கூட இட ஒதுக்கீடா.....??? எப்படியோ நான் எழுதியது கதை இல்லை. முடிவுக்காக காத்திருக்கிறேன் முடிந்ததும் தெரிவிப்பேன்..... அதிவிரைவில். நன்றி ஆனந்தி.
Deepika said…
ஆனந்தியின் கருத்தைத் தான் நானும் கூறுகிறேன். குமரனை ஒரு முறை நேரில் சென்று பொதுவில் வைத்து மன்னிப்பு கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். எந்த விததிலும் கட்டிய மனைவியை அடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விசயம். முதலில் குமரன் ஒத்துக் கொள்கிறாரா என பார்க்க வேண்டும்.

ஒத்து வரவில்லையென்றால், ஒரு நல்ல் குடும்ப நல ஆலோசகரிடம் இருவரையும் கௌன்சிலிங் அழைத்துச் செல்லுதல் நலம்.


காதலித்த உள்ளம் தானே, காதல் செத்தா போயிருக்கும்?? ஈகோ போன்ற மயக்கத்தில் இருக்கும் காதலை யாராவது எழுப்ப வேண்டும்..

இளவசரசியின் வாழ்க்கையில், குமரன் குறுக்கிடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
Nalliah said…

"ஆதலினால் காதல் செய்வீர்"

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “” என அறை கூவியவன் பாரதி.

ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதயங்கள் இணையாது வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.

எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?

பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன.

கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் "சாப்பாடு தயாரா?", "பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?" என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.

உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள். நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம்.
கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.

இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள நெருக்கத்தையே காதல் என எண்ணி, ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக சற்று நெருக்கமாக பழக நேர்ந்தாலே அது கல்யாணம் செய்து கொள்வது வரை சென்று விடுகின்றது.

இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.

காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளவும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.

– நல்லையா தயாபரன்

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந