Skip to main content

தி..க்...கு வாய்............

 லக அளவில் இந்தியாவில் திக்குவாய் மிக அதிகமாக கணப்படுகிறதாம் அதில் 80 சதவீதம் ஆண்களாம்.  உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் திக்குவாயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. ஆங்கிலத்தில் இதை stammering அல்லது shuttering  என்றும் கூறுவதுண்டு.திக்குவாயைப்பற்றி எழுத ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.  நானும் சிறுவயதில் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்பதும் அதன் பாதிப்புக்களை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதும் கூட ஒரு காரணம்.  என்னிடம் நிறைய திறமைகள் இருந்தும் என்னால் அதை செயல்படுத்த மிகவும் தடையாக இருந்தது இந்த திக்குவாய் என்றால் அது மிகையாகாது.                          


       சிறு வயது முதலே இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்தது நாலு நண்பர்கள் கூடும் இடத்தில் நான் போனால் நான் கேலிப்பொருள் ஆக்கப்படுவேன்...   இதனால் கும்பலாக இருக்கும் நண்பர் கூட்டத்தை தவிற்க்க நேர்ந்தது.... அந்த சந்தோஷத்தை இழக்க நேர்ந்தது..... பள்ளிக்காலத்தில் நான் என்னதான் பலதடவை வீட்டில் நன்றாகப் படித்து சொல்லி பார்த்துவிட்டு சென்றாலும் ஆசிரியர் முன் சென்றதும் என் தொண்டை வறண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்னால் படித்ததை  சொல்ல முடியாது அதற்க்கான தண்டனையை பெற்றுக்கொள்வேன்...... மனதளவில் இவ்வளவு படித்தும் பயனில்லாமல் போய்விட்டதே என்று நொறுங்கிப்போவேன். மனதிற்க்குள் அழுவேன் வெட்கி தலை குனிவேன். இதில் எனக்கு கொஞ்சம் ஆசுவாசம்என்னவென்றால்  ஒவ்வொரு வகுப்பிலும் முதல் காலாண்டு வரும் வரை இது நடக்கும். பரீச்சையின் மதிப்பெண்கள்  என் தரத்தை  காட்டிக்கொடுத்துவிடும். பிறகு ஆசிரியர்கள் என்னை அவ்வளவாக கொடுமைப்படுத்த மாட்டார்கள். அந்த வருடம் ஒரு வழியாக கடந்து போகும். அடுத்த புதிய வகுப்பு ஆரம்பிக்கும் போது திரும்பவும் இதே படிப்பினையை கொடுக்கும் இப்படியே தான் என் பள்ளி வாழ்க்கையும் பலியாகிப்போனது.

        ல்லூரி வாழ்க்கையில் ஆசிரியர் கேட்டால் சொல்லாமல் இருப்பதை ஒரு ஸ்டைலாகவே மாற்றிக்கொண்டேன். காரணம் ஒன்று என் குறையை மறைக்க, மற்றொன்று பெண் பிள்ளைகளுடன்(co education) முதன் முறையாக படிக்க நேர்ந்ததுஎன்பதும். கல்லூரிபேராசிரியர்களிடம்  அடிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது என்கிற கனவோடுதான் போனேன். என்னுடைய வகுப்பில் 69 பேர் உண்டு, அதில் நான் 69வது  மாணவன் அதாவது கடைசி  நபர் நான் தான் (as per alphabatical order).  அதனால் ஆசிரியர் என்னை பார்ப்பதே அபூர்வம்.... அவர் எடுக்கின்ற பாடத்தை நாங்கள்  follow செய்கிறோமா இல்லையா என்பதை அறிய last one  என்பார். அதாவது அவர் வாசித்ததை விட்ட இடத்திலிருந்து வாசிக்க சொல்வார் வழக்கம் போல் என் நா வறண்டுவிடும்.. பிறகு next one... next one....என்பார் அப்படியாக  அப்படியாக கடைசி  பெஞ்ச் முழுவது அந்த hour வெளியேற்றப்படுவோம்.  இது வழக்கமானஒன்றாகிப்போனது.கல்லூரி வளாகத்தில் ஒரு கொல்லாமரத்தில் (cashew nut tree) செட்டிலாகிவிடுவோம். இது பெண் பேராசிரியர் என்பதாக்  இத்தோடு விஷயம்  முடியும்.ஆனால் ஆண் பேராசிரியர் என்றால்  கதை கொஞ்சம் மாறும் உதாரணமாக  Define company ?? என்பார்..... நானும் ஏதோ எனக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை கேட்டது போல் நிற்பேன் 1000 times என்பார் அதை அடுத்த நாள் ஆயிரம் தடவை எழுதிக்கொண்டு வர வேண்டும்..... இதை சொல்லிவிட்டால் இதைவிட பெரிய கேள்வியாக கேட்பார்.  திணறும் வரை கேட்டு இம்போசிசன் போட்டுத்தான் விடுவார். அதனால் முதல் கேள்வியிலேயே சரண்டர் ஆகிவிடுவோம்....எனக்குதான் திக்குவாய் ஆனால் என்னை பின்பற்றி கூட வரும் கூட்டத்திற்கு நல்ல வாய் தான்.  அது அன்பால் சேர்ந்த கூட்டம்...... நான் சொல்லவில்லையென்றால் அவர்களும் சொல்ல மாட்டார்கள். பிறகு இரண்டு நாள் கல்லூரிக்கு சொல்லாமல் படம் பார்ப்போம்.  பிறகு ஒரு 20 தடவை எழுதி ஏற்கனவே எழுதிய பழைய இம்போசிசன் பேப்பரையும் பின்னால் சேர்த்து கொடுப்போம். இப்படியாக கல்லூரி வாழ்க்கையும் காலாவதியாகிப்போனது.


பிறகு வேலைக்குப்போனேன் அங்கே தொலைபேசியில் யாராவது அழைத்தால்  என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்க்குள் அவர் போனை வைத்துவிடுவார். இப்படியாகத்தான் நகரமாக நகர்ந்தது  என் வாழ்க்கை.... 

சரி ...
இதற்க்கு காரணம் தான் என்ன? திக்கு வாய் என்றால் என்ன???


                                திக்குவாய் என்பது ஒரு நோய் அல்ல....தன்னுடைய எண்ணத்தை கோர்வையாக ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளிப்படுத்த முடியாத  நிலையே திக்குவாய்.  அதற்க்காக அவர்கள்  வேகமாக எத்தனிக்கும்போது வார்த்தை தடுமாற ஆரம்பிக்கிறது.   இவர்கள் ஆரம்பித்துவிட்டால் மிகவும் விரைவாக தடங்கல் இல்லாமல் சொல்லிமுடித்து விடுவார்கள்......ஆனால் இடையில் சிறு தடங்கல் வந்தால் அவ்வளவுதான் மனமும்.... வாயில் உள்ள தசைகளும்...உடலின் செய்கைகள் அனைத்தின் கோ ஆர்டினேசன் இல்லாமல்போவதால் பேச்சு தொடர முடியாமல் போய் விடும்.

                               எனக்கு நாளடைவில் பயங்கள் குறைந்து தைரியமடைந்ததால் இன்று என்னிடம் திக்கு வாய் மறைந்துவிட்டது. என்னுடன் பழகிய எல்லா  புதிய நண்பர்களுக்கும்  எனக்கு திக்குவாய் இருந்தது என்ற விஷயம் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இதற்க்காக் நான் மருந்து எடுத்ததில்லை.... வாயில் கூழாங்கற்கள் போட்டதில்லை..... மனதை கல்லாக்கிக்கொண்டேன். எவர் சிரித்தாலும் சட்டை செய்வதில்லை.  என்னை நானே உயர்வாக கருதிக்கொண்டேன்.  மிகவும் இலகுவான சொற்க்களைக்கொண்டு என் பேச்சை ஆரம்பிக்க பழகிக்கொண்டேன். இன்று  வெளிப்பார்வைக்கு அந்த பிரச்சனை இல்லை ஆனால் இது மன ரீதியான பிரச்சனை என்பதால் கோபம் வந்தாலோ.... ரொம்ப ஆவேசப்பட்டாலோ இன்றும் என் வார்த்தைகள் சிதறும்.... குளறும் அதனால் முடிந்த வரையில் அதையும் தவிற்க்கிறேன்.  மருத்துவம் இந்த குறை பாரம்பரியம் இல்லை என்று சொல்கிறது  ஆனாலும் என் மகனுக்கு இந்த குறை  இருக்கிறது நான் அதை மிகவும் நுணுக்கமாக அணுகுகிறேன். அடுத்தவர்களின் கேலிப்பேச்சிலிருந்து அவனை பாதுக்காக்கிறேன்... பள்ளியில் சொல்லி வைத்து அவனை துன்புறுத்தாமல் பார்த்துகொள்கிறேன். நான் அனுபவித்த கொடுமைஅவனை அணுகாதவாறு ஒரு பொறுப்பான தந்தையாக ஒரு அனுபவஸ்தராக இந்த பிரச்சனையை அணுகுகிறேன். இந்த பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாக hyper active  அதாவது சுறுசுறுப்புத்தன்மை அதிகம் உள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதே என் அனுபவ பாடம். இவர்களின்(சீக்கிரமாக பேசி முடிக்க வேண்டும்) அவசரம் தான்  இந்த திக்குவாய்க்கு முதல் காரணமாக இருக்கிறது. நாமாக  நமக்கென்று ஒரு பேச்சு ஸ்டைலை வைத்துக்கொண்டால் கூட இதிலிருந்து மீண்டு விட முடியும். நிதானமாக பேசினால் போதும் என்று நினைத்தாலே இதிலிருந்து வெற்றி பெறலாம் என்பதே என் கருத்து. முக்கியமாக இந்த நபர்களை கேலிசெய்வது மனரீதியாக அவர்களை மிகவும் பாதிக்கும் எனவே அதை தவிற்க்க வேண்டும். அதை ஒரு குறையாக கருதாமல் நண்பர்கள் அவர்களையும் தங்கள் கூட்டங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குறையை வைத்து அவர்களை தாழ்மைப்படுத்துவது எந்த விதத்திலும் ஒரு நல்ல நட்பாகவோ அல்லது ஆரோக்கியமான செயலாகவோ இருக்க முடியாது. இந்த சமூகமும்  இதற்க்கு உதவினால் இந்த குறை உள்ளவர்கள் அதிக மன பாதிப்பின்றி இதிலிருந்து மீள ஏதுவாக இருக்கும்.


                         இதற்க்கு அந்த காலங்களில் மருந்து என்று ஒன்றும் கிடையாது. ஆனால் இன்று “ பாகோக்ளோன்” என்ற மருந்து முதன் முறையாக கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறதாக கூறப்படுகிறது. சிலருக்கு நாக்கின் அடியில் தசை அதிகமாக ஒட்டியிருக்கும் (முடிச்சு) அதை அறுவை சிகிட்சை மூலம் நீக்கி பயிற்ச்சி கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு மருத்துவரால் பரிசோதனை வாயிலாக கண்டுபிடிக்க முடியாது .   5 திக்குவாய் குழந்தைகளையும் 5 சாதாரண குழந்தையும் கொடுத்து அவர்களை பேச வைக்காமல் வெறும் மருத்துவ பரிசோதனை மூலம் அவர்களுக்கு  திக்குவாய் இருக்கிறதா என்று பார்க்கச்சொன்னால் கண்டிப்பாக அவர்கள் முயற்ச்சி தோல்வியில் தான் முடியும். இது அதிக அளவில் மனம் (மூளை)  சார்ந்த  விஷயமே....... பெற்றோர்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து ஊக்குவித்தால் இதிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம். சில ஆய்வுகள் தெரிவிப்பதைப்போல் இந்த குழந்தைகளின் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.... மணவாழ்க்கையிலும் ஒரு பிரச்சனையும் இருக்காது..... அதெல்லாம் வெறும் பயமுறுத்தல் தான்.
 தேவை குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமே.... நிதானமாக பேசு..... தன்னம்கையுடன் இலகுவான சொற்களைக்கொண்டு பேச்சை ஆரம்பி..... . பிறகு உலகம் உங்கள் கையில் என்பதை எழுதி வைத்துக்கொள். 

வாழ்க வளமுடன். 

          

Comments

Prabu Krishna said…
நீங்கள் இதனால் பாதிக்கப்பட்டவர் என்று நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது அண்ணா. ஒரு முறை மட்டுமே சந்தித்து இருந்தாலும் உங்களுடன் பேசியதால் சொல்கிறேன்.

உங்கள் மகனும் இதிலிருந்து வெளிவரும் நாள் தூரத்தில் இல்லை. தன்னம்பிக்கை போதும், எல்லாம் தீர்ந்து விடும்.
Kousalya Raj said…
மிக மிக ஆச்சர்யம் விஜயன்...!

இதை குறை என்று நான் சொல்ல மாட்டேன், சிறு பிழை! ஆனால் இதன் பாதிப்பு சிறிதும் உங்களிடம் தெரியவில்லை. அதிக நேரம் பேசி இருக்கிறேன் என்ற விதத்தில் எனக்கு இது ஆச்சர்யத்தை கொடுப்பதில் வியப்பில்லைதான்.

இருப்பினும் இவ்வளவு வெளிப்படையாக நீங்கள் பட்ட அவஸ்தைகளை சொல்லி இருப்பதற்க்கு தலைவணங்குகிறேன். இது போன்றவைகளை சொல்ல எல்லோராலும் முடிவதில்லை.

இத்தகைய பிரச்சனையில் இருபவர்களுக்கு உங்கள் கட்டுரை நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை கொடுக்கும்.

உங்கள் நெஞ்சுரத்தில் பாதியாவது மகனுக்கு இருக்காதா என்ன?! மிக விரைவில் அதில் இருந்து மீண்டு புது உத்வேகத்துடன் மேடையில் பேசி அசத்த போகிறான் பாருங்கள்.

நெகிழவைத்த பகிர்வு.



Unknown said…
நெஞ்சில் நின்ற பதிவு விஜி.

நல்ல விசயம் பகிர்ந்துள்ளீர்கள் விஜி.ஒரு மழலைக்கல்வி ஆசிரியையாக நான் சந்திக்கும் சில மாணவர்களை கையாள சிறந்த வழிமுறைகளைக் கூறியதற்கு நன்றி விஜி.அர்ஜூன் பிரச்சனையை ,குறைநீக்கல் போதனையுள்ள தந்தையாக உங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்பதால் அது அவனுக்கு பிரச்சனையாக இருக்காது.உங்கள் அனுமதியுடன் நான் என் சுவரில் பகிர்ந்துகொள்கிறேன் விஜி,என் சக ஆசிரியைகளுக்கும் சி வழிமுறைகளும் யுக்திகளும் கிடைக்கட்டுமே!

திக்கு வாய் என்றால் தீர்க்க முடியாத பிரச்சனை என்றே இதுவரையில் நினைத்து வந்தேன்!
ம்ம்...பதிவை படிச்சுட்டு கொஞ்சம் நெகிழ்வாய் இருந்தது...உங்கள் சிறுவயது மனப்போராட்டங்களை நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது......தனக்கு ஒரு சின்ன குறை?!! இருந்ததை கூட யாரும் இவ்வளவு பிரான்க் ஆ ஒத்துக்க மாட்டங்க...நீங்க அதை எங்களுக்கு பாஸிடிவ் எனேர்ஜியோட ப்ரெசென்ட் பண்ணிருக்கீங்க...இது குறை எல்லாம் இல்ல...நம்ம மனஷக்தி யோட ஓவர் கம் பண்ணி மீண்டு வரலாம் சொன்ன விஜி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...இப்படி ஒரு தன்னம்பிக்கை அப்பா இருக்கும்போது அர்ஜுன் சூப்பர் ஆ வந்துருவான்... உங்கள் தன்னம்பிக்கை பிளஸ் க்கு நிறைய பூங்கொத்து அண்ணா...அருமையான பதிவு...அதையும் தவிர்த்து உங்கள் மனப்போராட்டங்களை ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல ப்ரெசென்ட் பண்ணிய விதமும் அருமை...
எனது உறவினர் ஒருவர் இதே பிரச்சினையால் இளம் வயதில் பாதிக்கப் பட்டிருந்தார்...தற்போது அவர் ஒரு குற்றவியல் நீதி மன்றத்தில் மிக சிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவராக உள்ளார்...எனவே இது போன்ற பிரச்சினையுடையவர்கள் யாரும் கவலைப் பட தேவையில்லை...
Kumari said…
Thank you for the lovely post. Good to see you again as an active blogger. I never thought that you had faced this in your life. As per me this is neither a defect nor a deficiency. I personally had seen a friend face this kind of a situation, even though he had the knowledge to develop certain features of a software he was unable to express his views to the team. This put him behind and was always thought to be an under-performer. I felt that he lacked confidence on his English language skills and was scared to face people (especially white people) which made him to stammer while he spoke in public. I helped him gain confidence by letting him to talk to me in English without even bothering to know if it's right or wrong. Later I corrected him and also encouraged him by appreciating his conversation and the ideas in it. This built his confidence and now he is one of the major team leads and this has taken him to great heights. All you need is a reliable support the way Vijayan is doing for his son. Keep up your great job and very soon you will be astonished to see your son face the world stage with pride.
Unknown said…
thank u so mauch anna.................ennakum ethu pola problam iru anna....eni nega sonal pol try panraen anna..............
kiran.kumar said…
frnd, i am suffering from stammering too.. Experienced all kinds of incidents you have said above. My entire life is influenced by this stammering. It made my life a LIVING HELL. Now taking treatment for this, hopefully i cure this completely within this month....
வலைச்சரம் மூலமாக தங்களது பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
விஜி, இது ஆண்பிள்ளைகளில் 100/90 பேருக்கு உள்ள சிக்கல்தான். என் தம்பிகளில் ஒருவனுக்கு, பக்கத்துவீட்டுப்பையனுகளுக்கு, உறவுக்கார பசங்களுக்கு, பிறகு என் மகனுக்கு, இப்போ என் பக்கத்துவீட்டுப் பையனுக்கு என, சிறுவயதில் பல ஆண்குழந்தைகளுக்கு இந்தப்பிரச்சனை வருவது சகஜம். பெண்பிள்ளைகளுக்கு ஏற்படுவது குறைவுதான்... அதை வியாதியாகப் பார்த்து, அக்கறை செலுத்தினால், சம்பந்தப்பட்ட குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அப்படியே விட்டுட வேண்டியதுதான்.. மேலும் இப்படித் திக்குகிற குழந்தைகள் எதாவதொரு விதத்தில் திறமைசாலியாகவே வளர்வார்கள் என்பதும் அனுபவத்தில் கண்ட உண்மை.

தம்பி- அமைதியாக இருப்பான். ஏட்டுக்கல்வி குறைவு. எலக்டிக் சம்பந்தப்பட்ட வேலைகளைப் படிக்காமலேயே அனுபவத்தின் மூலமாகச் செய்து பழகிக்கொண்டான்.12வயதிலேயே எலக்டிக் வேலைகளைச் செய்வான்.

உறவுக்காரப் பையன், இப்போ பெரிய பேங்க் அதிகாரி.

பக்கத்து வீட்டு ஆள், சொந்தமாக இறும்புப்பட்டரை வைத்து பல ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்.

என் மகன் கணிதப்புலி.. சிக்கலான கணிதம் ஒன்றினை நகங்களைக் கடித்துக்கொண்டே கூர்ந்து கவனிப்பான், பிறகு அதற்கு பதில் தேடிவிடுவான் ஒரு சில வினாடிக்குள்..! இப்படிப் பலவாறாக...

இருந்தாலும் உங்களின் பதிவு.. டச்சிங்க.. சோகம்’லா.. :(

# வலைச்சரத்தில் உங்களின் ப்ளாக் பற்றிய அறிமுகம் வந்துள்ளது. புகைப்படத்தோடு. வாழ்த்துகள்
Unknown said…
nan ithai paditha vudan enakku siru vayathu ninaivil vanthu vittathu ungalai polave than nanum valarthen anal tharpothu munbai vida ippo pechu enakku oralavu nanraga ullathu anal muluvathumaga kunamadaiya villa i nan epadithan ithil irunthu mela pogiren endru theriya villai , anal ungalai kandu nan viyakkiren nengal tharpothu nanraga pesukren endru sollum pothu enaku migavum makilchiyaga ullathu yen endral antha varutham enna vendru enakku nanraga theriyum
Unknown said…
எனக்கும் திக்குவாய்.... நான் கஷ்டப்பட்டேன்..... இப்போதும் கூட கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந