Skip to main content

பாருங்க... பாருங்க நானும் ரவுடி தான்..........


போன வாரம் சீரடி சாயி பாபா கோவிலுக்கு போய் வரும்பொழுது நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதை உங்களுக்கும்  தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.........

                    வாரம் ஒரு முறை சென்னையில் இருந்து ஒரு இரயில் வண்டி சீரடிக்கு செல்கிறது. அதில் செல்பவர்கள் அநேகமாக சாயிபாபாவின் பக்தர்கள் தான்.  அனைவரும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதால் பாடல் மற்றும் பஜனைகள் களைகட்டும். நாங்களும் நன்றாக பிரயாணத்தை ரசித்து ருசித்து மகிழ்ந்து சென்றோம். இனிமையாக தரினத்தை முடித்து இரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

டிக்கட் பரிசோதகரால்  நடுக்காட்டில் இறக்கிவிடப்பட்ட   குடும்பம்.

              இரண்டு பக்கமும் காட்சிகள் பச்சை பசேலென்று கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அதை ரசித்துக்கொண்டும் என்  கேமிராவினால் காட்சிகளை  பதிவு செய்து கொண்டும்  வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய இரயில் நிலையத்தில் இருந்து ஒரு  ஏழைக்குடும்பம் நாய் மற்றும் மூங்கில் கம்பு சகிதமாக ஏறியது. எனக்கு தெரிந்து அவர்களது மொத்த சொத்தும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூங்கில் கம்பு சிறிய கூடாரம் அமைக்க பயன்பட வேண்டும் என்பதே என் யூகம். வழக்கம் போல் டிக்கட் பரிசோதகர் வந்தார். சட்டம் தன் கடமையை செய்தது. நடுக்காட்டில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். என் மனது சிறிது வருந்தினாலும் டிக்கட் இல்லாமல் அதுவும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறுவது என்பது சரியல்ல என்பதால் அது சரியாகவே பட்டது.


                  ஒரு அரைமணி நேர பிரயாணம் கழித்து  ஒரு  இரயில் நிலையத்தில் (கர்நாடகா) ஒரு பெருங்கூட்டம் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி வலுக்கட்டாயமாக  அமர்ந்தது. நாம் நம்முடைய முன்பதிவு செய்யப்பட்ட இடம் வேறுயாரும் வர வழியில்லை என்ற நினைப்பில் அங்காங்கே  செல்போன்,கேமிரா மற்றும் பல பொருட்களை வெளியே வைத்திருந்தோம்.
இந்த திடீர் ஆக்கிரமிப்பால் எங்களால் அந்த பொருட்களை எடுக்கவும் வழியில்லை. அதனால் பாதுகாப்பு கருதி அந்த கூட்டத்திடம் வேறு பெட்டிக்கு போகுமாரும் இது முன் பதிவு செய்த பெட்டி என்று கூறியதும் தகாத வார்த்தையினால் திட்டினர். வேறு வழியில்லாமல்  அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினோம்.

                   அப்பொழுதுதான் எங்கிருந்தோ பரபரக்க டிக்கட் பரிசோதகர் ஓடோடி வந்தார். இந்த சம்பவத்தை சொன்னோம். அவர் கூறியது எங்களை திடுக்கிட வைத்தது. இங்கே இஸ்லாமியருக்கான ஒரு திருவிழா நடப்பதாகவும் அதனால் இன்றும் இவ்வளவு கூட்டம் என்றும் அடுத்த ஜங்ஷனில் அவர்கள் இறங்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.  ஒரு நபரிடம் கூட டிக்கட் இல்லை ஆனால் அதை ஒன்றும் கேட்க முடியாது இது இப்படித்தான் நீங்கள் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார் மிகுந்த படப்படப்புடன். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்பொழுது அந்த இரயில் நிலையத்தில் இருந்து மப்டியில் வந்த இரயில் நிலைய போலீசார் அந்த நபர்களை கடுமையான சொற்களால்திட்டி விரட்டவே அவர்கள் ஒதுங்கி கொண்டனர். அந்த போலீசாரும் இறங்கினர்..இரயிலும் நகர்ந்தது......சிறிது நேரத்தில் அந்த கூட்டம் மீண்டும் வந்து சேர்ந்தது. தகராரை தொடர்ந்தனர்  நீ போலீஸ் இல்லை இரயில்வே மினிஸ்டரிடம் வேண்டுமானாலும் சொல் உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. அடுத்த ஸ்டேஷனில் அரை மணிநேரம் நிற்க்கும் அங்கே பார்த்துக்கொள்கிறோம் என்றனர். அதில் ஒருவன் மிகவும் தீவிரமாக செல்போனில் தொடர்பு கொண்டு வேறு நபர்களுடன் சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தான். நாங்கள் மொத்தம் ஏழுபேர்  சென்றிருந்தோம். அதில்  பலரும் அரசியலிலும் சட்ட துறையிலும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் தான். இருந்தாலும் அன்னிய இடத்தில் என்னதான் செய்துவிட முடியும். அதில் எனக்கும் எங்களை வழிநடத்தி சென்ற அந்த பிரம்மசாரிக்கும் மட்டுமே இந்தி தெரியும். மற்றவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. எனக்கு அடுத்த ஸ்டேஷனில் ஏதோ விபரீதம் நடக்க இருப்பது புரிந்ததால் நானும் என்னுடன் வந்த (அவர் உச்ச நீதிமன்ற வக்கீல்) நண்பருடன் இரயிலில் இருக்கும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று நடந்தோம். என்னுடன் வந்த வக்கீல் கட்டையாக முடி வெட்டியிருந்ததால் (போலீஸ் என்று நினைத்து) அவர்கள் எங்களை பார்த்ததும் கலவரமானார்கள். காரணம் அடுத்த ஸ்டேசனில் இறங்க வேண்டும் என்பதால் ஒருவரும் டிக்கட் எடுக்கவில்லை.அதில் பெரும்பாலானவர்கள் குடும்பம் சகிதமாக (பர்தா அணிந்து) இருந்தனர். எங்களது மனநிலையும் திக் திக் என்று இருந்தபோதும்  ஏசி பெட்டியை  அடைந்து ஏசி அட்டெண்டரிடம் போலீசை பற்றி விசாரித்தோம்.  அவன் இந்த இரயிலில் RPF போலீஸ் கிடையாது ஏன் ஏதாவது பிரச்சனையா  என்றனர். ஆனால் அங்கேயும் இதே கூட்டம் நின்றது அதனால் எங்களால் எதையும் சொல்ல முடியாமல் திரும்பிக்கொண்டிருந்த போதே அந்த ஸ்டேஷனும் (WADI) வந்தது. அங்கிருந்த படியே 100 க்கு மொபைலில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம். அவர்களும் அந்த் ஸ்டேசன் போலீசுக்கு தகவல் கூறுவதாக கூறினர்

                        அந்த கூட்டம் அப்படியே வெளியே இறங்கி எங்கள் ஜன்னலருகே வந்து மிக மோசமான வார்த்தையால் திட்டத்துவங்கினர். எமர்ஜன்சி எக்சிட்  (Emergency exit) எங்கள் பக்கம் இருந்ததால் ஜன்னலில் கம்பியே இல்லை. நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடியது. கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எறிய ஆரம்பித்தனர். அதுவரை இந்தியனாக இருந்த நாங்கள் அவர்களால் இந்துவாக சித்தரிக்கப்பட்டோம். சம்பவம் திரித்து கூறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆவேசமாக நாங்கள் உண்ண வைத்திருந்த வாழைப்பழத்தையும் உணவையும் எடுத்து எங்கள் மீதே எறிந்தனர். எங்கள் சக பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.  எங்களிடம் ஜன்னல் ஷட்டரை போடுமாறு கூறினர். நாங்களும் அப்படியே செய்தோம். அவர்கள் அந்த ஷட்டரை ஆக்ரோஷமாக தாக்கியதில் அதுவும் உடைந்து தொங்கியது. கூட்டத்தில் ஒருவனின் கையிலும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பொழுது 2 வயதான இரயில்வே போலீசும் வந்து சேர்ந்தார். அவர்கள் அந்த கும்பலிடம் கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரும் கேட்பதாக இல்லை. சிறிது நேரத்தில் கும்பல் தகாத வார்த்தையால் சத்தமிட்டவாரே பெட்டிக்குள் நுழைய துவங்கியது. போலீசாரும் அவர்களை தடுத்தனர். நானும் அவர்களை வரவிடாமல் தடுத்தேன். ஒரு வழியாக இரயில் நகர துவங்கியது.......அவர்களும் அந்த பெட்டியை தாக்கியவாரும்..... தகாத வார்த்தையால் திட்டியவாரும் கொஞ்சநேரம் இரயில் வேகத்திற்க்கு ஈடு கொடுத்தனர்..... இரயில் வேகமெடுக்கவே  பதட்டம் தணிந்தது.

இதில் என் மனதில் தோன்றிய சில நியாயமான கேள்விகள்......

1. முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பிறர் ஏறி அராஜகம் பண்ணுவது சரியா.

2. ஒரு பாவப்பட்ட குடும்பத்தை இறக்கிவிட்ட டிக்கட் பரிசோதகர் இவர்களிடம்  பயந்தது ஏன்..?
3. இரயில் பெட்டியின் ஷட்டரை அவர்கள் நொறுக்கியும் இரயில் நிலைய போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

4. இதெல்லாம் சின்ன மேட்டர் இதற்க்கெல்லாம் யாராவது அபாய சங்கிலியை இழுப்பார்களா என்று கருதியிருந்தால் எங்களிடம் அபராதம் வசூலிக்காதது ஏன்..?
5. சிறுபான்மையினர்  எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் அளவிற்க்கு அவர்களை சட்டத்தின் அப்பாற்பட்டவர்களாக கருத வைத்து பாதுகாப்பது யார்...?

டிக்கட் பரிசோதகரும், இரயில்வே போலீசாரும் தம் கடமைகளை உணர்ந்து பொறுப்பாக நடந்தால் இதெல்லாம் நடக்குமா...

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் இரயிலில் இரயில்வே போலீசார் மிகவும் கண்டிப்புடன் அனைத்து இட்லி மற்றும் டீ வியாபாரிகளிடம் 20 ரூபாய் வீதம் வசூலித்துக்கொண்டிருந்ததை கண் கூடாக பார்த்தேன். ஒரு வேளை அரசாங்கம் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லையோ என்னவோ...?


 எது எப்படியோ இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தான் மிகப்பெரிய சம்பவமாக மாறும். மாறியிருக்கிறது.  அவரவர் இடத்தில் எல்லோரும் பெரியவரே. யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை பெறுவது  உலகத்திற்க்கு ஒன்றும் புதிதல்லவே......

 ஆனால் ஒன்று அராஜகம் அழிந்தே தீரும். ஆதலினால்தான்  அகிலம் முழுவதும் அல்லல் படுகிறீர்கள்.ஆனால் அதில் அப்பாவிகள் பாதிக்கப்படும்போது யாராக இருந்தாலும் நமக்கும் வலிக்கவே செய்கிறது.

                   

Comments

அய்யோ மக்கா இது எங்கள் மும்பைவாசிகளுக்கு மிகவும் சகஜமாகிப்போச்சுய்யா...!

அடிக்கடி நாங்கள் ரயில் பிரயாணம் மேற்கொள்வதால் இந்த அநியாயங்களை கண்டும் காணாமலும் இருந்து விடுவதும் உண்டு, சில சமயம் பொங்கி டிக்கெட் இல்லாதவர்களை விரட்டியதும் உண்டு...!
தப்பும் தவறும் எல்லாப்பக்கத்திலும் இருக்குய்யா யாரை குற்றம் சொல்வது சொல்லுங்க...? நம்ம நாட்டு சட்டமும் அப்படி, குடிகளும் அப்படியே...!
மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு...நானும் மும்பை சென்று வரும் நேரங்களில் இது போல் அனுபவப் பட்டிருக்கிறேன்....நல்ல தலைவர்கள்?அவர்களுக்கேற்ற மக்கள்?
இது "மத சார்பற்ற கட்சிகள் " ஆட்சி செய்யும் மத சார்பற்ற நாடல்லவா?
இப்படித்தான் இருக்கும்.
Unknown said…
எனக்கு தெரிந்து அவர்களது மொத்த சொத்தும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூங்கில் கம்பு சிறிய கூடாரம் அமைக்க பயன்பட வேண்டும் என்பதே என் யூகம்.////படிக்கும்போதே மனம் கனத்தது விஜி.யாத்திரை போகிறோம் என்று ஒரு மோசமான அனுபவமும் கிடைத்திருக்கிறது.எழுத்துக்கள் யாவும் எங்களையும் பயணம் செய்ய வைத்தது விஜி!
சொந்த அனுபவம், நொந்த அனுபவமாப்போச்சே. வருந்துகிறேன். :(

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந