Skip to main content

சுத்தம் என்பது சுத்தமாக இல்லை: சர்தார்ஜி !!!!!!

நாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வெளிநாடுகளை பார்க்கும் போது  அது ரொம்ப சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியாதது அல்ல. ஏனென்றால்  நம் வீட்டை சுத்தமாக வைக்கவேண்டும்  என்றாலே ஒரு நாளைக்கு எத்தனை தடவை துடைக்க வேண்டும்  அப்படி இருக்க ஒரு நாடே சுத்தமாக இருக்க  அனைவரின் கூட்டுமுயற்ச்சி அவசியம்.
                                    நம் நாட்டின் (அ)சுத்தம்)  நாம் அறிந்ததே. காரணமும் நாமே. வீட்டை சுத்தமாக்கி குப்பைகளை தெருவில் கொட்டுகிறோம் .   காரில் உணவருந்திவிட்டு  மிஞ்சியவற்றை ரோடில் வீசுகிறோம். இரயில் பயணங்களில் கூட  உண்டபின் எஞ்சியவற்றை  வெளியே வீசிவிடுகிறோம். (உள்ளே போட இடமுவில்லை என்பதும் உண்மைதான்).                
                                      நாம்மிடையே மாற்றம் வந்தால் தான்  சுற்றுபுறமும், சுகாதாரமும் வசப்படடும். இந்த விஷயத்தில் தென் இந்தியாவின் நிலையைவிட வட இந்தியாவின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கே 6 மாதம் குளிர் காலமாக இருப்பதால்  அவர்கள் அந்த காலத்தில் கொஞ்சம் குளிக்க யோசிப்பார்கள் மேலும் பிகார் வாசிகளிடம் சென்றால் ஒரு வித துர்நாற்றம் நம்மை விரட்டும்.
                               இப்படிதான் ஒவ்வொரு  நாட்டினரின் சகிப்புத்தன்மையை  அறிய உலக அளவில் ஒரு போட்டியை நடத்தினார்கள். ஒரு செம்மறி ஆட்டை ஒரு  அறையில் அடைத்து வைத்து  அதில் யார் அதிக நேரம் இருக்கிறார்கள்  என்று கண்டறியப்பட்டது. முதலாவதாக அமெரிக்கர் சென்றார், ஒரு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கமுடியவில்லை நாற்றம் தாங்காமல் ஓடி வந்துவிட்டார். அடுத்தது ரஷ்யன்  அரைமணி நேரத்திலேயே அவனுடைய விக்கட்டும் விழுந்தது. மூன்றாவதாக  இந்தியாவின் சார்பாக சர்தார்ஜி  உள்ளே சென்றார்  அடுத்த நொடியில் செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !.

Comments

:)))))))))
இருந்தாலும் இது ரொம்ப ஓவரா இல்ல?
சர்தார்ஜி ஜோக் சொல்லி முடித்திருந்தாலும்,சொல்லப்பட்ட விஷயம் வருத்தும் உண்மை.பான் போட்டுத் துப்பி ஊரெல்லாம் கறையாக்கி வைக்கும் வழக்கம்-நீங்கள்தான் பார்த்திருப்பீரகளே.என்று மாறும் இந்நிலை?
Unknown said…
சர்த்தார்ஜி விஷயத்தை ஜோக்காக எடுத்துகொண்டாலும், நீங்கள் சொன்னது போல தென் இந்தியா ஒன்னும் வட இந்தியாவை விட உசத்தி இல்லை. சென்னையில் ஒரு சிக்னலில் 3 நிமிஷம் நின்று கவனியுங்கள். ஒரு மோட்டார் ஸைக்கிளை சுற்றி எவ்வளவு துப்புறானுங்கள் இந்த மானம் கெட்ட தமிழன் என்பது புரியும். நமக்கெல்லாம் நீட்டி முழக்கி பேசத்தான் தெரியும்.
Unknown said…
பட்டாபட்டி அண்ணா வருகைக்கு நன்றி.
Unknown said…
மாணிக்கம் சட்டநாதன் அவர்களே கருத்துக்கு நன்றி.
Unknown said…
அசோக்ராஜ் ஆனந்த்ராஜ் அவர்களே வருகைக்கு நன்றி.
Unknown said…
சந்திரசேகரன் ஐயா கருத்துக்கு நன்றி.
////செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !////

நகைச்சுவையாகச் சொன்னாலும் நல்ல விசயம் சொல்லியுள்ளீர்கள்...
// இந்தியாவின் சார்பாக சர்தார்ஜி உள்ளே சென்றார் அடுத்த நொடியில் செம்மறியாடு வெளியில் வந்தது நாற்றம் சகிக்காமல் !.///
இல்லியே பன்மொகன் சிங் நாள்தோறும் குளிப்பாராமே...:]]]
நாமே நம்மை கிண்டலடிப்பது நன்றாகவே உள்ளது

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந