Skip to main content

(எங்கள் ) ஊர் சுற்றலாம் வாங்க -கன்னியாகுமரி

எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில்  நிறைய சுற்றுலாத்தளங்கள்  இருக்கின்றன. அதை நம் நண்பர்கள் அனைவருக்கும்  வெளிச்சம் போட்டு காட்டவே இந்த பதிவு. முதலில் இன்று கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பிக்கலாம்
கன்னியகுமரி பகவதிஅம்மன் கோவில்

அன்னை பராசக்தி சிவனை திருமணம் செய்ய் வேண்டி தவமிருந்து க்ன்னியாகவே வீற்றிருக்கிறாள். குமரி அம்மன் கன்னி பகவதியாக் வீற்றிருப்பதனால் இம்மாவட்டம் க்ன்னியகுமரி என்று பெயர் பெற்றது. அம்மனின் வைர மூக்குத்தி மிகவு ம் பிரகாசமாக் ஜெலிக்கும் அழகுடையது( அசலை யாரோ ஆட்டையை போட்டுவிட்டதாக ஒரு பேச்சும் உண்டு). சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல்  சக்தி இல்லை என்பதற்க்கேற்ப வட நாட்டில் சிவன் காசி விஸ்வநாதராகவும், தென்னாட்டில்(குமரியில்) அன்னை பராசக்தி கன்னி பகவதியாகவும் குடியிருக்கிறார்கள்.

குகநாதீஸ்வரர் கோவில் 

இது இங்கே  எங்களைப்போல்  குமரி வாசிகளுக்கே அதிகம் தெரியாது. கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள  குக நாதீஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. காசியில் விஸ்வநாதராக காட்சியளிக்கும் சிவ பெருமான் குமரியில் ஈஸ்வரராக, குகநாதீஸ்வரராக கோவில் கொண்டுள்ளார். சோழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது.

சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்

          குமரி கடலில் சூரிய உதயம் பார்ப்பதற்கு கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும்.  உலகில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடிய இடங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. சித்திராபவுர்ணமி அன்று சூரியன் மறைவதையும், சந்திரன் தோன்றுவதையும் ஒரு சேர காணலாம். இந்த அபூர்வ காட்சி உலகில் வேறு எங்கும் காண முடியாது.  முக்கடலும் சங்கமிக்கும் புனித கடலில் நீராடி கதிரவனை வழிபடுவது புண்ணியமாகும். மஹாபாரதத்தில் அர்ஜீனன் குமரியில் வந்து நீராடினான் என்று வரலாறு கூறுகிறது.

விவேகானந்தர் மண்டபம்

25-12-1892 அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர் அன்னை பகவதியை வணங்கிய பின் தூரத்தில் தெரிந்த இப்பாறையை கண்டு மகிழ்ந்து நீந்தி சென்று அதில் தியானத்தில் ஆழ்ந்தார். இந்தியாவின் பெருமையை உலகறிய  செய்யவேண்டும் என்ற எண்ணம் இங்கு வைத்துதான் சுவாமிக்கு உதயமானது.அதன் நினைவாக சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும் சிலையும் அமைக்கப்பட்டு 02-09-1970-ல்  அன்றைய ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை 

குமரி கடலில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் அருகில் உள்ள பாறையில் விஸ்பரூபத்துடன் காட்சியளிப்பது, உலக திருமறையாம் திருக்குறள் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலை. 133 அதிகாரங்களில் திருக்குறள் அமைந்திருப்பதை நினைவு படுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 01.01.2000 அன்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.திருவள்ளுவர் சிலைக்கும், விவேகனந்தர் மண்டபத்திற்க்கும் சென்று வருவதற்க்கு பூம்புகார் நிறுவனத்தினரால் படகு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

காந்தியடிகள் நினைவு  மண்டபம்

                 தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு  குமரிகடலில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவு மண்டபம் 1956-ல் கட்டப்பட்டுள்ளது.அம்மண்டபத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தியதி அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் விழுகிறது. 15-1-1937-ல் காந்தியடிகள் குமரிக்கு வருகை தந்தபோது குமரிக்கடலில் நீராடிய காட்சி, அன்று சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து வரவேற்ப்பு புத்தகத்தில் தமிழில் கையொழுத்திட்டது இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது.

காமராஜர் நினைவாலயம்

கருப்பு காந்தி என்றும், கர்மவீரர் என்றும் குமரி மக்களால் அப்பச்சி என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக  அமைகக்ப்பட்டுள்ள இம்மண்டபம் 02.10.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு,தேசப்பற்று என பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


   
                            

Comments

Sudarsan said…
Superb information about Our Native..
Still many are there...!!!But this is also fine...
Sivamjothi said…
Try to meet/talk to ayya.. see the videos..

He gives திருவடி தீக்ஷை.


திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409



http://sagakalvi.blogspot.com/


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                                              *********************************** கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் ! பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.                                             *********************************** பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம