Skip to main content

ஊர் சுற்றலாம் வாங்க - திற்பரப்பு நீர்வீழ்ச்சி

நாஞ்சில் மனோவுடன் நான்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு இயற்கை எழில் 


கொஞ்சும் நீர்வீழ்ச்சியாகும். இங்கு 12 சிவாலய  ஓட்டங்களில் ஒன்றான 


மகாதேவர் கோவில்  உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொக்கமாக திகழும் 


       
  இங்கு நவீன சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி ஆகிய வசதிகள் 


செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்க்க 


தயாராய் இருக்கிறது. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் 


அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி மூலம் இயற்க்கை எழில் கொஞ்சும் 


கோதையாற்றின் அழகையும், அற்புதத்தையும் ரசிக்கலாம்.இது நாகர் 


கோவிலில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

Comments

மனோவோடு சேர்ந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வந்துட்டீங்க! புகைப்படங்கள் அழகு!
Unknown said…
நன்றி ஐயா. இருவரும் ஒரே ஊர்தான். ஆனால் இணையம் மூலம்தான் நட்பு ஆரம்பம்.
மனோவுடன் இணைந்து, குட்டிக் குற்றாலம், திற்பரப்பில் குளித்து மகிழ்ந்திருக்கிறீங்க..

கலக்கல் பாஸ்
மனோ வுடன் பயண அனுபவங்கள்..
கலக்கலா இருக்கு..
Unknown said…
நன்றி நிருபன்சார், நன்றி கருன் சார்.
rajamelaiyur said…
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
நன்றி
கூட்டான்சோறு பகுதி - 2
நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
பயண கட்டுரை அருமை.

என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
அழகான, மறக்கமுடியாத சுற்றுலாத்தலம்..
இனிய அனுபவங்கள்தான். படங்கள் அழகு. நானும் திற்பரப்பு அருவி பற்றி நண்பர் சொல்ல கேட்டதுண்டு. அவசியம் அவருடன் செல்வேன்.
அது சரி....நம்ம மனோவுக்கு தொப்பை ஏன் இப்படி "அஞ்சு மாச புள்ளைத்தாச்சி " மாதிரி இருக்கு விஜி?

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...