Skip to main content

கன்னியாகுமரி மாவட்டம்- பொற்றையடி ஸ்ரீ சாய் ஆனந்த ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம்

ஆலயத்தின் புற தோற்றம்
இன்று (04.04.2012, புதன் கிழமை) கன்னியா குமரி மாவட்டத்தில் பொற்றையடியில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  shri C.B SATPATHY  கும்பாபிஷேகத்தையும் பிராண பிரதிஷ்டையையும் செய்து வைத்தார்.

ஆலயத்தின் முன் பார்வை
                  இது வள்ளி ஸ்டீல் இண்டஸ்டீரீஸ் -ன் உரிமையாளர் திரு.நேபாள்ராஜ் என்பவரின் முழு முயற்ச்சியாலும் சொந்த பணத்தாலும் (வேறு எவரிடமிருந்து எந்த நன்கொடையும் பெறாமால்) நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை எப்படி சுசீந்திரமும் விவேகானந்த பாறையும் கவர்ந்து இழுத்ததோ அந்த வரிசையில் இந்த ஆலயமும் இடம்பெறும் என்றால் மிகையில்லை.

ஆலயத்தின் உள்ளே
            கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பலரை அங்கே காண முடிந்தது. பாபாவின் பக்தர்கள் எல்லா ஐஸ்வர்களையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவரது பக்தர்களை பார்க்கும்போது அது ஒரு வகையில் சரி என்றே தோன்றியது. நான் வருடா வருடம் மும்பையின் அருகில் உள்ள ஷீரடி சாயிப்பாபா கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த கோயில் இங்கே அமையப்பெற்றதால் இனி அவரை அடிக்கடி தரிசனம் செய்யலாம் என்பதே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் தான்.

ஸ்ரீ சத்பதி சிலையை திறந்து பூஜையை ஆரம்பிக்கிறார்.


மந்திரங்கள் ஜெபிக்கப்படுகிறது.
               கடவுள் ஒருவரே என்று போதித்த சத்குரு ஷீரடி சாயிபாப இக்கலியுகத்தில் சமதர்மத்தை நிலைநாட்டி, அவரே அனைவரின் கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.சாயிபாபா நம்முடன் 1918 வரை இருந்தார்.

தீபாராதனை.


ஆலயத்தின் உள்ளே பொறிக்கப்பட்டுள்ள
பாபாவின் உபதேச மொழிகள்



கும்பாபிஷேகம் செய்ய ஆயத்தமாகிறார்கள்



கும்பாபிஷேகம் நடக்கிறது



எங்களது நகரசபை சேர்மன்
மீனா தேவ் (பேட்ஜ் அணிந்தவர்) கும்பபிஷேகத்தை பார்வையிடுகிறார்.

கிரீடம் அணிவிக்கப்படுகிறது
கோயிலின் புறத்தோற்றம்.

ஆரத்தி எடுக்கப்படுகிறது

பாபாவிற்க்கு உடை அணிவிக்கப்படுகிறது.
இவர் தான் இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு. நேபாள்ராஜ்.
                          நீ என்னை பார். நான் உன்னை பார்க்கிறேன். குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்களும், நான்கு வித சாதனை முறைகளும் அவசியமில்லை. நம்பிக்கையுடன் ஒரு குச்சியை நிலத்தில் நட்டு வணங்கினாலும் நீ கேட்டது கிடைக்குதா இல்லையா என்று பார். நம்பிக்கை, பொறுமை இவை இரண்டும் நான் கேட்கும் தட்சணை. யாரும் யாரை சேர்ந்தவர்களும் இல்லை. நான் உன்னில் இருக்கிறேன். நீ என்னுள் இருக்கிறாய். நான் மசூதியில் வாழும் தூய வெள்ளை பிராமணன். இந்த தூவாரகா மாயில் காலடி வைப்பவரின் துன்பங்கள் மறைந்து இக பர சுகம் அடைவர் இது சத்தியம் என்றார் அவர்.

Comments

Kumari said…
Thank you for the great pictures. Gave us the feeling of having seen it personally.

Raji
Unknown said…
நன்றி ராஜி.
தனிமனிதனாக ஒருவர் இவ்வளவு பணம் போட்டு செய்த்து கேட்க மகிழ்ச்சி!படங்கள் மிக தெளிவாக இருக்கின்றன.உங்களுக்கு புகப்படம் எடுக்கும் ஆர்வம் பல பதிவுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது விஜி!
பாலா said…
புகைபடங்கள் கும்பாபிஷேகத்தை நேரில் பார்த்த உணர்வை தருகிறது. மிக்க நன்றி
எனக்கு இடம் இன்னும் பிடிபடவில்லை, ஹைவேயில இருக்கா அல்லது மருத்துவாமலை கீழே இருக்கா..?
ம்ம்ம்ம்ம்ம் எனக்கு இது புது தகவலா இருக்கு....!!!!
Unknown said…
மெயின் ரோட்டில் தான் இருக்கிறது. நேற்றுதான் இந்த கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அடுத்ததாக திருப்பதி தேவஸ்தானமும் ஒரு கோவிலை கன்னியாகுமரி பகுதில் கட்ட இடம் வாங்கியிருக்கிறது. எனவே இனி க்ன்னியாகுமரி வரும் ஆன்மீக வாதிகளுக்கு நல்ல திருப்தியாக இருக்கும். பார்ப்பதற்க்கு நிறைய இடங்களும் இருக்கும்.
தகவல்களும் படங்களும் மிக அருமை.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...