Skip to main content

கன்னியாகுமரி மாவட்டம்- பொற்றையடி ஸ்ரீ சாய் ஆனந்த ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம்

ஆலயத்தின் புற தோற்றம்
இன்று (04.04.2012, புதன் கிழமை) கன்னியா குமரி மாவட்டத்தில் பொற்றையடியில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  shri C.B SATPATHY  கும்பாபிஷேகத்தையும் பிராண பிரதிஷ்டையையும் செய்து வைத்தார்.

ஆலயத்தின் முன் பார்வை
                  இது வள்ளி ஸ்டீல் இண்டஸ்டீரீஸ் -ன் உரிமையாளர் திரு.நேபாள்ராஜ் என்பவரின் முழு முயற்ச்சியாலும் சொந்த பணத்தாலும் (வேறு எவரிடமிருந்து எந்த நன்கொடையும் பெறாமால்) நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை எப்படி சுசீந்திரமும் விவேகானந்த பாறையும் கவர்ந்து இழுத்ததோ அந்த வரிசையில் இந்த ஆலயமும் இடம்பெறும் என்றால் மிகையில்லை.

ஆலயத்தின் உள்ளே
            கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பலரை அங்கே காண முடிந்தது. பாபாவின் பக்தர்கள் எல்லா ஐஸ்வர்களையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவரது பக்தர்களை பார்க்கும்போது அது ஒரு வகையில் சரி என்றே தோன்றியது. நான் வருடா வருடம் மும்பையின் அருகில் உள்ள ஷீரடி சாயிப்பாபா கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த கோயில் இங்கே அமையப்பெற்றதால் இனி அவரை அடிக்கடி தரிசனம் செய்யலாம் என்பதே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் தான்.

ஸ்ரீ சத்பதி சிலையை திறந்து பூஜையை ஆரம்பிக்கிறார்.


மந்திரங்கள் ஜெபிக்கப்படுகிறது.
               கடவுள் ஒருவரே என்று போதித்த சத்குரு ஷீரடி சாயிபாப இக்கலியுகத்தில் சமதர்மத்தை நிலைநாட்டி, அவரே அனைவரின் கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.சாயிபாபா நம்முடன் 1918 வரை இருந்தார்.

தீபாராதனை.


ஆலயத்தின் உள்ளே பொறிக்கப்பட்டுள்ள
பாபாவின் உபதேச மொழிகள்



கும்பாபிஷேகம் செய்ய ஆயத்தமாகிறார்கள்



கும்பாபிஷேகம் நடக்கிறது



எங்களது நகரசபை சேர்மன்
மீனா தேவ் (பேட்ஜ் அணிந்தவர்) கும்பபிஷேகத்தை பார்வையிடுகிறார்.

கிரீடம் அணிவிக்கப்படுகிறது
கோயிலின் புறத்தோற்றம்.

ஆரத்தி எடுக்கப்படுகிறது

பாபாவிற்க்கு உடை அணிவிக்கப்படுகிறது.
இவர் தான் இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு. நேபாள்ராஜ்.
                          நீ என்னை பார். நான் உன்னை பார்க்கிறேன். குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்களும், நான்கு வித சாதனை முறைகளும் அவசியமில்லை. நம்பிக்கையுடன் ஒரு குச்சியை நிலத்தில் நட்டு வணங்கினாலும் நீ கேட்டது கிடைக்குதா இல்லையா என்று பார். நம்பிக்கை, பொறுமை இவை இரண்டும் நான் கேட்கும் தட்சணை. யாரும் யாரை சேர்ந்தவர்களும் இல்லை. நான் உன்னில் இருக்கிறேன். நீ என்னுள் இருக்கிறாய். நான் மசூதியில் வாழும் தூய வெள்ளை பிராமணன். இந்த தூவாரகா மாயில் காலடி வைப்பவரின் துன்பங்கள் மறைந்து இக பர சுகம் அடைவர் இது சத்தியம் என்றார் அவர்.

Comments

Kumari said…
Thank you for the great pictures. Gave us the feeling of having seen it personally.

Raji
Unknown said…
நன்றி ராஜி.
தனிமனிதனாக ஒருவர் இவ்வளவு பணம் போட்டு செய்த்து கேட்க மகிழ்ச்சி!படங்கள் மிக தெளிவாக இருக்கின்றன.உங்களுக்கு புகப்படம் எடுக்கும் ஆர்வம் பல பதிவுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது விஜி!
பாலா said…
புகைபடங்கள் கும்பாபிஷேகத்தை நேரில் பார்த்த உணர்வை தருகிறது. மிக்க நன்றி
எனக்கு இடம் இன்னும் பிடிபடவில்லை, ஹைவேயில இருக்கா அல்லது மருத்துவாமலை கீழே இருக்கா..?
ம்ம்ம்ம்ம்ம் எனக்கு இது புது தகவலா இருக்கு....!!!!
Unknown said…
மெயின் ரோட்டில் தான் இருக்கிறது. நேற்றுதான் இந்த கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அடுத்ததாக திருப்பதி தேவஸ்தானமும் ஒரு கோவிலை கன்னியாகுமரி பகுதில் கட்ட இடம் வாங்கியிருக்கிறது. எனவே இனி க்ன்னியாகுமரி வரும் ஆன்மீக வாதிகளுக்கு நல்ல திருப்தியாக இருக்கும். பார்ப்பதற்க்கு நிறைய இடங்களும் இருக்கும்.
நல்ல பல தகவல்கள். நன்றி.
தகவல்களும் படங்களும் மிக அருமை.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந