Skip to main content

மீண்டு வருமா தமிழகம் ......................?

தமிழகத்தில் திமுக , அதிமுக அணிகு மாற்றாக  நல்ல நேர்மையான தலைவரைக்கொண்ட ஒரு கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   தமிழக அரசியலின் அவல நிலையைப் பார்க்கும் போது, பீகார், மேற்க்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைக்காட்டிலும் மிகவும் கேவலமாக போய்விட்டது.     அங்கே நிதிஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் மக்களுக்கு நல்லதை செய்து நல்ல செல்வாக்குடன் உள்ளனர்.   எதிர்கட்சிகள் செல்லாக்காசாகிப்போய்விட்டது.

                         ஆனால் தமிழ் நாட்டில் ஆளுங்கட்சி தோற்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.   தமிழ் நாடு உருப்படவேண்டுமென்றால் அது தோற்றாக வேண்டும் . ஆனால் மாற்று அணி என்று பார்க்கையில்  அதிமுக  நல்ல பலத்துடன் இருப்பது போல் தோன்றினாலும்  அது அனைத்து மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் அணி அல்ல. அவர்களும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல என்றாலும் தப்போ சரியோ  செய்வதை ஆணித்தரமாக செய்யும் துணிவு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அரசியலில் சில குப்பைகளை அகற்றவேண்டியிருப்பதால்  இந்த தடவை  இவர் ஆளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

                       இவர்களுக்கு மாற்றாக தகுதியான ஒரு ஆள் என்று பார்த்தால் அரசியலில் அந்திம காலத்தை நோக்கி நகருகின்ற கட்சியின் தலைவரான வைகோ தென்படுகிறார்.  இவருடைய பேச்சில்  அனல் பறக்கும். இன்றய தலைவர்களில் பேச்சாற்றலில் இவருக்கு நிகர் இவர்தான்.
                           
                           ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு தேவையான  அனைத்து அறிவையும் பெற்றிருந்தாலும் காலம் அவரை  அவர் அறியாமலேயே ஒரு வெற்றிடத்தை நோக்கி கொண்டு செல்கிறது .   அரசியலில்  கோர்வையாக பேசத்தெரியாத  அவருக்கு மிகவும் ஜூனியரான விஜயகாந்த் சாதித்த அளவுக்கு கூட அவர் சாதிக்கவில்லை. என்னதான் திறமையிருந்தாலும் காலம் ஒத்துழைக்கவில்லையென்றால்  என்ன ஆகும் என்பதற்க்கு வைகோ ஒரு சிறந்த முன் உதாரணம்.  இவரை  சார்ந்திருப்பவர்கள் படித்தவர்கள் , நல்ல சிந்தனைவாதிகள்  அவரது தலைவரைப்போல் அதிரடி அரசியல் தெரியாதவர்கள். இவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே  இருக்கிறது.  அனேகமாக இந்த தேர்தல் அவருடைய கட்சியை காணாமல் கூட போக செய்யலாம்.

                          யாருக்கும் பிடிக்காத ஒதுக்கப்பட்ட ஸ்ரீசாந்த் கூட  (ஸ்ரீகாந்துக்கே பிடிக்காத)  அணியில் வர முடிகிறது .   ஒரு வேளை கேரளாவில் இதுக்கான விஷேச  பூஜைகள் இருக்குமோ என்னமோ ?( செய்வினையோ  செயப்பாட்டுவினையோ !! என்ன கருமமோ).  வைகோ இதைப்பற்றி அம்மாவிடம் விசாரிப்பது நலம்.  .   ஓட்டுவங்கி அரசியல் இவருக்கு தெரியாது.  இவரும் சுப்ரமணியம் சாமி மாதிரி ஆகிவிடுவார் என நினைக்கிறேன்.

மருத்துவர் அய்யா மற்றும் திருமா இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள்.  இப்போழுது இருக்கின்ற நிலையை தக்க வைத்துக்கொண்டாலே  இவர்களைப்பொறுத்தவரையில் பெரிய சாதனை தான். இவர்கள்  சேர்ந்திருக்கும் கூட்டணி  இவர்களுக்கு எந்த விதத்தில் உதவும் என்பது தெரியவில்லை.  காங்கிரஸ் தான் மிகவும் பரிதாபகரமான இடத்தில் இருக்கிறது. திமுகா வுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டாலும்  தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி. 

   சீமான் வைகோ வின் இடத்தை ஓரளவு நிரப்பி வருகிறார். அவருக்கும்(தானாக) கூட்டம் கூடுகிறது.   இந்த முறையும் காங்கிராஸூக்கு  பெரிய இழப்பை உண்டாக்குவார் என எதிர்பார்கப்படுகிறது.அவருடைய இலக்கு அடுத்த தேர்தல்தான்.  இந்த தடவை இல்லையென்றாலும் அடுத்த  தேர்தலிலாவது ஒரு  ஊழலில்லாத கட்சி  ஆண்டால் தான் தமிழ் நாடு  சரிவிலிருந்து மீளும். அப்படி ஒரு கட்சியை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல இறைவன் தான்( ரஜினி!!!!!)  உதவ வேண்டும் .

Comments

Anonymous said…
நிச்சயம் மீண்டு வரும்
படித்தேன், ரசித்தேன்.
Unknown said…
ஆர்.கே.சதீஷ்குமார் :
மீண்டு வர வேண்டும். இந்த ஊழல் பெருசாளிகளை களி திங்க வைக்க வேண்டும்.
Unknown said…
FOOD :
வருகைக்கு நன்றி. பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கே. சாப்பாட்டு பிரியரோ ?
Unknown said…
வேடந்தாங்கல் - கருன்:
வருகைக்கு நன்றி. கருன்.
vaiko, seeman, rajini.. full length comedy.
இது பேராசை :))மீண்டு(ம்) வரும்னு எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணா...:))))
//அப்படி ஒரு கட்சியை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல இறைவன் தான்( ரஜினி!!!!!) உதவ வேண்டும்// அப்படியாவது அவரை அரசியலப் பற்றி வாயத் திறக்க வைக்கலாம்னு பார்க்கறீங்களா!...
காலம் மிக சிறந்த தலைவனை காட்டும்.
பாலா said…
இந்த தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அது நல்ல மாற்றமா என்பது மூன்றாண்டுகள் கழித்துதான் தெரியும்.
Sriakila said…
நல்ல அலசல்.
Unknown said…
ராஜேஷ், திருச்சி:
கேப்டனை விட்டு விட்டீகள் அவரும் காமெடியாக சித்தரிக்கப்பட்டவர்தான். காமெடி ஹிட்டானால் ....? . கலைஞரை விட காமெடி பண்ண இனி உலகில் யாரும் இல்லை. டெல்லி காமெடி படு சூப்பர்.
Unknown said…
ஆனந்தி.:
கண்டிப்பாக மீண்டுவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
Unknown said…
middleclassmadhavi :
ரஜினி அதுக்கெல்லாம் லாயக்கு இல்லை.
Unknown said…
தமிழ் உதயம்:
அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.
Unknown said…
பாலா:
அம்மா திருந்தினா அம்மாவுக்கும் தமிழகத்துக்கும் நல்லது. இல்லையென்றால்............ அதுவும் கடந்து போகும்.
Unknown said…
Sriakila said...:
கருத்துக்கு நன்றி.
சீமான்?? ஆசை, தோசை, அப்பளம், வடைடடட... சில கருத்துகளோடு நான் மாறுபடுகிறேன். ஜெயலலிதாவால் என்ன நடக்கும் என்று நண்பர் ராம்சாமி இன்று எழுதியிருந்தார், கிட்டதட்ட அதுதான் நடக்க வாய்ப்பு என்று நானும் நினைக்கிறேன். நாம்/நாடு இந்த விஷயத்தில் இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டியிருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
Unknown said…
வசந்தா நடேசன் :
ஜெயலலிதா வந்தால் என்ன நடக்கும் என்பதை அனுபவித்துவிட்டோம். கலைஞர் சாகசத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம். இரண்டுமே ஊழல் வாதிகள் தான். அதனால் தானே மாற்றுபற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது. சீமானை பற்றி அனுமானிக்கலாம் ஆனால் அது சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே.
Unknown said…
ஆயிஷா:
நன்றி ஆயிஷா.
எல்லாதகுதியும் இருந்தும் இல்லாமல் போனவராக வைக்கோ இருப்பது அவருடைய முடிவெடுக்கும் திறனால் தான்.
அவர்மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தது அவரை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கியது. இதை அவர் செய்தே இருக்கக்கூடாது. வாழ்வோ தாழ்வோ அவர் தனக்கு கிடைத்த தொண்டர்படை மூலம் தனித்து இயங்கி அரசியல் செய்திருந்தால் இந்நாளில் அவர் ஒருவர்தான் தி.மு.க.-அ.இ.அ. தி.மு.க. - காங்கிரஸ் இவைகளுக்கு மாற்றாக வளர்ந்திருப்பார். வலது, இடது கம்யூனிஸ்ட் களும் இவருக்கு பக்க பலமாக இருந்திருப்பார்கள். அவராலேயே அவர் கெட்டார்.மீண்டும் அ.இ.அ. தி.மு.க வுடன் கூட்டு என்பதால் அவர்மீது இருந்த நம்பிக்கையை விட்டனர் நம் மக்கள்.
இன்று நாம் ஜெ யைத் தவிர வேறு மாற்று சக்தி இல்லாத ஒரு நிலையில் இருக்கிறோம்!’இவருக்கு அவர் மேல்’ என்று எண்ண வேண்டியதுதான்!
rajamelaiyur said…
Why don t give one chance to vijaykanth? . . .
rajamelaiyur said…
Why don t give one chance to vijaykanth? . . . By www.kingraja.co.nr
TamilTechToday said…
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந