Skip to main content

உலக சந்தையில் இந்திய மூளைக்கு அதிக விலை !!!!!!!!!!

 புத்தாண்டு காலையிலேயே  வீட்டில் பெரிய பஞ்சாயத்தாகிவிட்டது.  எனது மூன்றாவது படிக்கிற மகனுக்கும் சிறிய  மகளுக்கும் சண்டை.   புதுவருடமும் அதுவுமாக அவனை அடிக்க கையை ஓங்கி பின்னர் கொஞ்சமாவது அறிவிருக்காடா அந்த நாயை விட கேவலமாக இருக்கிறாயே என்று திட்டினேன். அதற்க்கு விடுங்கப்பா உங்க பிள்ளைதானப்பா பின்னே எப்படி இருக்கும்  என்ற படி ஆமாப்பா நாய்க்கு அறிவு கிடையாதா? என்றான் அப்பாவித்தனமாக.

                                  உருப்படியா  ஒரு கேள்வி கேட்கிறானே என்று நினைத்து , மகனே எல்லா மிருகங்களுக்கும்  மூளை உண்டு ஆனால் மூளையில் செரிப்ரம் என்ற ஒரு பகுதி உண்டு.அது மிருகங்களின்  மூளையில் சிறப்பாக இயங்குவதில்லை. அது ஒன்றுதான் மனிதனை (உன்னையல்ல) பிற விலங்குகளைவிட மேம்பட்டவனாக ஆக்குகின்றது என்றேன்.
                                   
                                மனிதனின் மூளை  கம்யூட்டரைப் போன்று ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்கிறது. உதாரணமாக நீ விளையாடிக்கொண்டே உன் தங்கையை  அழவைக்க முடிகிறது என்றேன். அப்போது அவன் அப்பா அமெரிக்கா, ஜப்பான்  காரனுக்கு அதிக மூளை இருக்குமாப்பா ?  அவன்தானே நிறைய கண்டுபிடிக்கிறான் (  என் மகனாடா  நீ உன் வயசிலே நான் இப்படியெல்லாம் யோசிக்கவேயில்லியேடா !)   அப்படியெல்லாம்  இல்லை, மூளை எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கு  ஆனா அதை  எதுக்கு உபயோகப்படுத்துறோம் என்பது தான் வித்தியாசம் என்றேன்.

                 அதற்க்கும் என் மகன், ஆனால் அப்பா   என்ன  இருந்தாலும்  நம் இந்திய மூளைக்குதான் உலக சந்தையில் மதிப்பு இருக்குன்னு என் நண்பன் சொன்னான்.( இருக்காதா பின்னே  ! தகவல் தொடர்பில் (IT field) நாம் தானே ராஜா  ஐயோ !!  ராசா இல்லை) ஒரு தகவலும் சொன்னான்
 ஒரு தடவை  எல்லா உலக மக்களின் மூளையையும் வைத்து ஒரு கண்காட்சி வைத்தார்களாம் அதில்  அமெரிக்கரைவிட,ஜப்பானியரைவிட இந்தியரின் மூளைக்குதான் விலை அதிகமாக இருந்ததாம் ( இருக்காதா பின்னே !) . ஏன்னு கேட்டா  அது தான்  யூஸ் பண்ணாம ரொம்ப ஃப்ரஷ்  ஆக இருக்குமாம். 



                      கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடித்திருந்தால் (இல்லையென்றாலும் ) கண்டிப்பாக ஓட்டுபோடவீங்கன்னு நம்புகிறேன்.

Comments

ஆகா!மேலே தூக்கி விட்டுக் கீ..ழே இறக்கிட்டீங்களே!
3-வதிலேயே இப்படி மூளையை உபயோகிக்கக் கத்துக் கொடுத்தால், வேறு எப்படி?...:-))
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
Unknown said…
@ middleclassmadhavi
என் மகன் மூன்றாவது படிக்கிறான். மூன்று வயது இல்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
சந்திரசேகரன் ஐயாவுக்கு வணக்கம்.உண்மையிலேயே நாம தானே ஐயா வெளிநாட்டில் டாமினேட் பண்றோம். இதெல்லாம் அந்த காலத்துக்கதைகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Unknown said…
தஞ்சை.வாசன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே.
நானும் மூணாவது-(3-வது)ன்னு தான் எழுதியிருக்கேன், 3-வயதில்-ன்னு இல்லை..!!
Unknown said…
middleclassmadhavi

தவறான புரிதல்.மன்னிக்கவும். அதென்ன உங்கள் பெயரே வித்தியாசமா இருக்கே.
நான் சாதாரண மிடில் க்ளாஸ் எண்ணங்கள் உள்ள மிடில் க்ளாஸைச் சேர்ந்த ஒருத்தி. ரொம்ப ஹைக்ளாஸ்த்தனமா கடினமான பதங்களையோ தத்துவங்களையோ சொல்லத் தெரியாது. அதான் - middle class madhavi
ராசா மாதிரி ஆளுங்கதான் மூளைய ஒர்க் பண்ணுறாங்க நாமெல்லாம் "ங்கே"...
Anonymous said…
Where ever in world Indians are there!
But we are wasting our creativity, energy, money by praying actors/ seeing cinemas/ writing cinema related article/watching cricket.

Calculate the man hours wasted for the above.
Unknown said…
@middleclassmadhavi:
உங்களுடைய தன்னடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.உங்களையும். பதிலுக்கு நன்றி

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந