Skip to main content

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD)
சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.


அறிகுறிகள்
* கீழ்படிதல் இல்லாதிருத்தல்
* பேசும்போது குறுக்கிடுதல்
* ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல்
* அதிகம் பேசுதல்
* மறதி
* அதிக சத்தமாக விளையாடுதல்
* கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல்
* பொறுமையின்மை
* கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல்
*  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை
             இவர்களுக்கு வலிப்பு நோய் காணப்படலாம். இவர்களின் பிரச்னை என்னவென்றால் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காரியத்தை செய்யமுற்படுவார்கள்.  எதிலும் தொடர்ச்சியாக அதிக நேரம் ஈடுபடமாட்டார்கள்.
             
             இவர்களின் படிப்பும் சுமாராகத்தான் இருக்கும். ஆசிரியர் பாடம் எடுக்கும்போது தொடர்ச்சியாக இவர்களால் பாடங்களை பின்பற்ற முடிவதில்லை. இவர்களுக்கான பிரத்யோக பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த பள்ளியறையில் இவர்களுக்கு மனச்சிதறல் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்ணைக்கவரும் வகையில் நிறங்கள் அல்லது பென்ஞ்,டெஸ்க் போன்றவைகளை
தவிற்க்கின்றனர். இவர்களுக்கு முக்கியமாக மனதை ஒருங்கிணைக்கின்ற பயிர்ச்சி தேவை. இவர்களிடம் ஏதாவது ஒரு திறமை அபிரிதமாக காணப்படும் அவற்றை கண்டறிந்து ஊக்குவித்தால் அந்த துறையில் பிரகாசிப்பார்கள். விளையாட்டுத்துறை இவர்களுக்கு பொருத்தமான ஒன்று. மருந்து மாத்திரையால்  பெரிய மாற்றத்தை காணமுடியாது, முறையான பயிற்ச்சியால்(Meditation,yoga) அதிக பயன்பெறலாம்
சிகிட்சைகள்: 
* குழந்தைகளின் நோயின் வீரியத்தை பொறுத்தும் வகையை பொறுத்து உங்களது குழந்தை மருத்துவர்(மருந்து சம்பந்தமாக) உங்களுக்கு உதவுவார். 
மருந்து போக, (behaviour modification) அவனுடைய சிறிய முயற்சியையும் பாராட்டும் விதத்தில் அவனுக்கு பிடித்த பரிசுகள் கொடுக்கவும்.
எக்காரணத்தை கொண்டும் அவர்களை அடிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. தெரிந்தே அவர்கள் தவறு செய்வதில்லை.
பெற்றோருக்கு அதிக பொறுமையும், அர்பணிப்பு தன்மையும் தேவை.
பெரிய வேலையை கொடுக்காமல் அதை பிரித்து கொடுத்து சிறிது சிறிதாக செய்ய சொல்லலாம். ஊக்குவித்தல் ரொம்பவே பயன் கொடுக்கும்.
மற்ற குழந்தைகளிடம் விளையாட அனுமதிக்க வேண்டும் அதன் மூலம் சமூக தொடர்புகள் அறுந்துவிடாமல் இருக்கும்.
அவர்களிடம் வெறுப்பு காண்பித்தால் அவரது மனதை மேலும் பாதிக்கும் இது அவர்களுடைய கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
                   
                   யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் குழந்தையை எண்ணி மனம் தளர வேண்டாம்., ஏனென்றால் உலகமே வியக்கும் ஈடு இணையற்ற அற்வியல் மேதை ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’, உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் ‘பில்கேட்ஸ்’, புவியீர்ப்பு விசையை ஓர் ஆப்பிள் மூலம் உணர்ந்து உலகத்திற்க்கே உணர்த்திய மேதை ‘ஐசக்நியூட்டன்’, இன்று ஹாலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் ‘ஸ்டீவன் ஸ்பீல்பர்க்’ என அனைவருமே இந்த மாதிரியான பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள்தான். இனி நம் குழந்தையில் எதிர்காலம் அவர்கள் கையில் இல்லை நம் கையில். SO "DON'T WORRY BE HAPPY"

 
  கொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற    நீங்க  என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)

Comments

சிறந்த பதிவு!இது போன்ற தேவையான் பதிவுகள் அதிகம் வருவதில்லை. தொடரட்டும் உங்கள் பணி!
அண்ணே சூப்பரான பதிவுண்ணே.....
பயனுள்ள பதிவு....தொடர்ந்து எழுதுங்கள்....
Unknown said…
@சென்னை பித்தன் :
உங்களுடைய ஆதரவுக்கும்,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@MANO நாஞ்சில் மனோ :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@NKS.ஹாஜா மைதீன் :
உங்களுடைய ஆதரவுக்கும்,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
இனியவன் சார்...இன்னைக்கு தான் இந்த பக்கம் எட்டி பார்க்கிறேன்..என்ன ஒரு அற்புதமான பதிவு...hyperactive babies பார்த்து இருக்கிறேன்...ஆனால் இவளவு விவரங்கள் இன்னைக்கு தான் தெரிந்து கொண்டேன்...நன்றி இனியவன் சார்..
Unknown said…
@ஆயிஷா :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@ஆனந்தி..:
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
GUNA said…
nandru. mattrum thangalthu karuthuand advice ku nandri.. thangalathu virupathiruku inganga blog thee anaikkap pattathu...
சிறந்த பயனுள்ள பதிவு...நன்றி இனியன் சார்..
ஆமினா said…
உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்

தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.html
Unknown said…
@தோழி பிரஷா :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@ஆமினா :
உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் ,நீங்கள் வழங்கிய விருதுக்கும் நன்றி.மீண்டும் வருக
நன்றி நண்பரே ...
ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .
இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
pudugaithendral said…
அட்டென்ஷன் டிஃபிஷியன்சி சிண்ட்ரோமிற்கும் இதற்கும் தொடர்பு உண்டா? இந்த் சிண்ட்ரோம் அதிகம் டீவி பார்ப்பதால் வருவதாகவும் படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அந்த சிண்ட்ரோமுக்குக் இருக்கிறது அதான் கேட்டேன்.

இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா?
Unknown said…
@புதுகைத் தென்றல்:
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@புதுகைத் தென்றல் : குழந்தைக்கு எதிலும் கான்சென்ட்ரேட் பண்ணமுடியவில்லை என்றால் எதில் அவன்/ள் விரும்பி கான்சென்ட்ரேட் செய்கிறார்களோ அதை அனுமதிப்பது நலம். ஆரம்ப நாட்களில் என் மகனை கார்டூன் படங்களை பார்க்கவிட்டதின் பலனாக அவன் ஓரளவு கான்சென்ட்ரேட் செய்ய பழகிக்கொண்டான். நம் இஷ்டத்தை இவர்களிடம் திணிக்க முடியாது.
//இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா?// யாருக்காவது உபயோகப்படும் என்றால் மகிழ்ச்சிதான்.
பயனுள்ள தகவல்கள் இனியவன்.இப்படிக்குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விபரமும் இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Unknown said…
ஸாதிகா :
இப்படிக்குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விபரமும் இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்//
கண்டிப்பாக இதேபதிவிலேயே அதையும் இணைத்துவிடுகிறேன்.வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.
Unknown said…
@மாத்தி யோசி:
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
மிக சரியான இடுகை இனியவன்.... இப்போது தான் படித்தேன்.... மிக பயணுள்ளத் தகவல்.... மிக்க நன்றி திடருங்க....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
Unknown said…
சி. கருணாகரசு :
வாங்க சார். நல்ல இருக்கீங்களா.
தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.
விஜி said…
ரொம்ப நல்ல பதிவு...ஷேர் பண்றேன்
Unknown said…
@விஜி :
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Unknown said…
@Geetha6 :
உங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக
Ganesan said…
பயனுள்ள தகவல். நல்ல எழுத்து நடை.

வாழ்த்துக்கள்.
FARHAN said…
பதிவுலகில் வித்யாசமான முயற்சி தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்
என் பக்கத்து வீட்டில் 3 வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. ரோட்டில் போகிறவர்களை கூட அழைத்து திட்டுகிறது. ( எருமைமாடே, சனியனே, டே உன்னைத்தான் காது கேக்கலையா) மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பெண்ணுடன் சேர அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு செல்ல ஆட்டோவில் அனுமதிக்கவில்லை. அந்த தாய் இதன் பாதிப்பை உணர்ந்ததாகத் தெரிவில்லை. சொன்னால் சண்டைக்கு வருகிறார்.
Sriakila said…
இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். குழந்தைகளின் குணங்களைப் பற்றி எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரொம்பவும் பயனுள்ள பதிவு.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
மிகவும் பயனுள்ள பதிவு நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள்...
மிகவும் பயனுள்ள விஷயங்கள்.வாழ்த்துக்கள்.
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந