Skip to main content

ஊர் சுற்றலாம் வாங்க - சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை


சொத்தவிளை கடற்கரை


குட் நைட் சூரியன்


பீச்சுக்கு போகும் வழி இருபுறமும் சிங்கம் இருக்கும் பயப்பட வேண்டாம்
இதுதான் பீச்சுக்கு நுழைவாயில்  இதைத்தவிர   எல்லா இடம் வழியாகவும் மக்கள் செல்வார்கள்.
கலக்கல் கன்ஸ்ட்ரக்‌ஷன்.
இவள் எழுத  அலை அழிக்க என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு!!!!!!!!
நாகர்கோவிலிலிருந்து 12  கி.மீ, தொலைவில் புத்தளம் அருகில்  அமைந்துள்ள அழகிய இயற்க்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும். சுனாமியின் போது நிறைய பேரையும், வண்டிகளையும் தன்னகத்தே அணைத்து கொண்டு சென்ற தாயுள்ளம் கொண்ட கடற்கரை.
குழந்தைகள் பூங்காவும் கண்காணிப்பு கோபுரமும்.
பயப்பட  வேண்டாம் இது நானேதான் (ஒரு அல்ப ஆசைதான் )
என் மனைவி
என்ன ஒரு சந்தோஷம் வீடு கட்டியதில்
 இது வெளி உலகுக்கு சமீபத்தில் தெரிய் தொடங்கி புதிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்கு நவீன மயமாக்ப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகர மக்களுக்கு இது இயற்க்கை அளித்த ஓர் வரப்பிரதாமாகும். ஒரு காரை பனை மரத்தின் உயரம் தூக்கி சென்று  மரத்தினிடையே இட்டுசென்றது. சுனாமியின் போது  நிறைய சூட்கேஸ்கள் கேட்க ஆளின்றி அனாதையாய் கிடக்கக் கண்டேன் .

சங்குத்துறை கடற்கரை

எங்கள் கல்லூரியின் பேராசிரியர்கள் மூவர்க்கு  சங்கு ஊதியது இந்த பீச்
 (அது தான் காரணப்பெயரோ!!!)
நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையான் சங்குதுறை பீச்.
(நிறைய பேருக்கு) சங்கு (ஊதிய) துறை  கடற்கரை கொஞ்சம் டேஞ்சர்தான்.
மாலைப்போழுதின் மயக்கத்திலே நான்.
  தற்ப்போது நவீன மயமாக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா, குடில்கள் உட்பட சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Comments

கடற்கரைக்குப் போய் வந்த அனுபவம் ஏற்பட்டது,பதிவைப் படித்ததும்!
சூப்பர் போட்டோஸ் மக்கா.....!!!
இப்பிடியும் அழகா ஒரு இடம் இருக்கா...??? எலேய் மரியாதையா என்னை அங்கே கூட்டிட்டு போகணும் இல்லைனா சூனியம் எங்கே வைப்பென்னு எனக்கே தெரியாது ஆமா...
அருமை அருமை....ஆனா ரொம்ப சூடா இருக்குமே இடம்..???
Unknown said…
@ சென்னை பித்தன் : தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
Unknown said…
இப்பிடியும் அழகா ஒரு இடம் இருக்கா...??? எலேய் மரியாதையா என்னை அங்கே கூட்டிட்டு போகணும் இல்லைனா சூனியம் எங்கே வைப்பென்னு எனக்கே தெரியாது ஆமா...//
முதலில் வீட்டை விட்டு வெளியில் வாரும் ஓய். பொட்டப்புள்ள கணக்கா வீட்டிலே இருந்தா எப்படி?
ஒரு சுற்றுலாத் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்..
arasan said…
நல்ல படங்களும் தகவல்களும் நன்றி சார்.
Unknown said…
!* வேடந்தாங்கல் - கருன் *!// நன்றி கருன் சார்.
Unknown said…
நன்றி @அரசன் சார்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
@FOOD : வருகைக்கு கருத்துக்கும் நன்றி சார். எழுதுவது என் மகள் இல்லை சார். நன்றி.
பாலா said…
வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சா? இனி மாசு படுத்திடுவாங்க...

அதுசரி உணவு தங்கும் வசதி பத்தி ஒண்ணும் சொல்லலியே?
Unknown said…
நன்றி பாலா சார். இங்கு தங்கும் வசதி ஒன்றும் கிடையாது. இங்கு உள்ளுர் மக்கள் மட்டுமே வருகிறார்கள். கன்யாகுமரியில் டூரிஸ்ட்கள் அதிகம் வருவதால் நெருக்கடி அதிகம். எனவே உள்ளூர் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக பொழுதை கழிக்க இங்கே வருகிறார்கள்.
rajamelaiyur said…
படங்கள் அருமை
Anonymous said…
நல்ல பதிவு ...வாழ்த்துக்கள்...
புகைப்படங்களும் தூள்....
வணக்கம் சகோதரரே.அருமையான ஒரு பகிர்வு .
நிஜமாகவே ஒரு சுற்றுலாப் பயணம் சென்றுவந்த
அனுபவம் கிட்டியது.நன்றி பகிர்வுக்கு.வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...

நரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்

              1950 ஆம் ஆண்டு  செப்டம்பர்  17 -ல்  குஜராத்திலுள்ள வட்நகர்(vadnagar) என்ற சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சோசியல் சயின்ஸ்- ல் முதுகலை பட்டம் பெற்றவர்.  இவருடைய  அலுவலகம் ISO 9001:2008 CERTIFIED ஆகும்.                                    முதன் முதலாக அக்டோபர் 2001-ல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் புஜ் என்ற இடத்தில் மாபெரும்  பூகம்பம் ஏற்பட்டு குஜராத் மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பைக் கண்டது.  அதிலிருந்து  குஜராத்தை மீட்டெடுத்து இந்தியாவிலேயே  ஆச்சரியப்படும் வகையில் முன்னணி மாநிலமாக ஆக்கிய பெருமை  மோடியையே சாரும்.  மதுக்கடை வருமானம் அங்கு கிடையாது. ஓட்டு வங்கிமற்றும் இலவச (அரிசி) அரசியல் அவர் செய்வது கிடையாது. அவருடைய ஒரே முழக்கம்...