Skip to main content

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!


எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு”. ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக்கொல்கிறேன்.
                     பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.
                    முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன்... ஒரு காலகட்டத்தில் அந்த கிறுக்கல் கிறுக்காக மாறவே அதிலிருந்து கொஞ்சம் விலகி முகநூலில் அடியெடுத்து வைத்தேன்.
                              முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட அதிக நேரம் தேவையில்லை என்பதாலும்.....  முக்கியமாக  தொடர் பதிவு என்ற மிரட்டல் இல்லவே இல்லை என்பதாலும் ,அதிக புதிய நண்பர்கள் கிடைத்ததாலும்,நண்பர்களின் நேரடி தொடர்பு ஏற்படுவதாலும் பதிவுலகத்தை விட்டு மெதுவாக அந்நியப்பட துவங்கினேன். அந்த நேரத்தில் முகநூலும் மிகவும் பிடித்து போய்விடவே  அங்கேயே நேரத்தையும் எதிர்காலத்தையும் கொன்று கொண்டிக்கொண்டிருக்கும்  அந்த உன்னத நேரத்தில் தான் வந்தது  நாஞ்சில் மனோவின் இந்த ஒரு ”தொடர் பதிவின்” அழைப்பு.
Harish Durai Raj.(என்னை பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியவர்)

இதன் மூலம் பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைவூட்டிய நண்பர் நாஞ்சில் மனோவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

                                    அண்ணன் திண்டுக்கல் தனபாலன் சொல்லாவிட்டால் இந்த அழைப்பு எனக்கு தெரியாமலேயே  போயிருக்கும். அந்த வகையில் அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். அது ஒருபுறம் இருக்க.... இது தொடர் பதிவு என்பதால் இன்னும்  தொடர வேண்டும் என்ற ஒரு மரபு இருப்பதால் ஒரே ஒரு நபரை மட்டும் தொடர அழைக்கிறேன்..... காரணம் எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்கள் வட்டத்தை மனோவே அழைத்துவிட்டார். எனவே பதிவுலகில் இருந்தாலும் தற்போது தொடர்பில் இருக்கும்

தோழி  S.K. SELVI  யை மட்டும் தொடர அழைக்கிறேன்.

பதிவுலகத்திற்கு உயிர் கொடுக்க என்னால் இயன்ற முயற்சியை நானும் செய்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.
                            

Comments

அடிக்கடி பதிவுலகம் பக்கமும் கொஞ்சம் வாங்க விஜயன்...
ஒரு வழியா ஒரு தொல்லை ஓஞ்சுதா ....
Unknown said…
இனி அடிக்கடி வருகிறேன் கவிதை வீதி செளந்தர்.
Unknown said…
ஹா....ஹா..... பாலா மனசை படிச்சிட்டீங்க.
Unknown said…
பாலா உங்களையும் கோர்த்து விட்டிருக்கலாமே வட போச்சே.

திருக்குறளைப்போல சுருங்கச்சொல்லினும் சிறக்கவே சொல்லிவிடைபெற்றுவிட்டிர் விஜி.
"கணினி வாங்கிய காரணம்" என்று தொடர் பதிவு ஆகி விட்டதா....? ஹிஹி... நானும் மாட்டிக் கொண்டுள்ளேன்... விரைவில்...


தொடர்ந்து இதிலும் (Blog) கலக்க வாழ்த்துக்கள்...
மனோ அண்ணா கவனிக்க...

கணிப்பொறி வாங்கியதை சின்ன தொடர்பதிவா எழுதியிருகாரு விஜயன் அண்ணா...

எப்படியோ தப்பிச்சிட்டாரு....
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட்டதற்கு நன்றி :)
எனக்கும் பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு”. ஆனால் எனக்கு பிடித்த சகோ சொன்னாதால் எழுதினேன்.

//ஏதோ வந்தோமா ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற என்னை ///

நீங்களும் நானும் ஒன்றுதான் ஆனால் ஒரே ஒரு வேறுபாடு நீங்கள் கிறுக்குவது பேஸ்புக்கில் நான் கிறுக்குவது வலைத்தளத்தில் அவ்வளவுதான் வித்தியாசம்
ஆஹா ஆஹா நினைவில் நின்றவை வெறும் நினைவாக இல்லாமல் வெளியே மறுபடியும் வந்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி...!
சே. குமார் said...
மனோ அண்ணா கவனிக்க...

கணிப்பொறி வாங்கியதை சின்ன தொடர்பதிவா எழுதியிருகாரு விஜயன் அண்ணா...

எப்படியோ தப்பிச்சிட்டாரு....//

ஆமாய்யா குமார், தப்பிச்சிட்டாருன்னு நினைப்பாம் ஹி ஹி...
என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக்கொல்கிறேன்.//

சத்தியமா எனக்கு அந்த சிக்கன் கறி வேண்டாம், மெஸ்ஸில் மீன் கரி சாப்பாடு வாங்கி தரவும்.
இனிவாயில் வந்ததை வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.//

என்ன ஓய் டாஸ்மாக் பக்கம் இருக்கீறோ ?
அண்ணன் திண்டுக்கல் தனபாலன் சொல்லாவிட்டால் இந்த அழைப்பு எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்.ல்

அவரு வலைத்தளங்களின் சந்து பொந்து ஒன்னும் விடாம புகுந்து விளையாடிட்டு இருக்காருய்யா....!
தோழி S.K. SELVI யை மட்டும் தொடர அழைக்கிறேன்.//

இம்புட்டு பிசியிலும் உங்களுக்கு மதிப்பளித்து உடனே பதிவு போட்டுட்டாங்களே டீச்சர்....... வாவ் கிரேட்....!

எனக்கு மதிப்பளித்து உடனே பதிவிட்ட உமக்கும் எனது நன்றிகள் மக்கா....!
அனுபவங்களை வலைத்தளத்தில் பதிவு செய்வது வாசகர்களுக்காக மட்டுமில்லை விஜயன், நமக்கு ஒய்வு காலம் வரும்போது இது ஒரு டைரியாக இருக்கும், படிக்க படிக்க ஆஹா இப்படியெல்லாமா வாழ்ந்து இருக்கிறோம் என்ற சந்தோசம் கிடைக்கும் இல்லையா, பேஸ்புக் நிலையில்லாத உலகம் அது, ஸோ டைம்பாஸ் தட்ஸ் ஆல்.
Unknown said…
நன்றி மனோ மறுபடியும் பதிவுலகம் பக்கம் கொண்டுவந்தமைக்கு......இனி மாதம் ஒரு முறையாவது பதிவெழுதி உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன்.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந